சின்னாளப்பட்டி,ஜன.13- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் காந்தி கிராமத்தில் உள்ள லட்சுமி கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல் வர் முனைவர் மலர்விழி தலைமை தாங்கினார். மாணவ, மாணவியர்கள் பங் கேற்ற கயிறு இழுத்தல், உறி யடித்தல், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் சின்னாளப்பட்டி சக்தி ரியல் எஸ்டேட் - புரொ மோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் கிருபாகரன், எம்9 ஸ்கின் பராமரிப்பு அகா டமி நிர்வாக இயக்குனர் மேகா கிருபாகரன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்த னர். பேராசிரியர் உமா மகேஸ்வரி விழாவை ஒருங் கிணைத்தார்.