districts

img

ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி

திண்டுக்கல், மார்ச் 7- திண்டுக்கல் மாநகராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 35-ஆவது வார்டில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் லெப்பை குளம் தூர்வரும் பணியை கூட்டு றவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி துவக்கி வைத்தார்.  திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அடியனூத்து பகுதியில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரம் தயார் செய்யும் கூடம் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலும், ரத்னா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டிலும், 37-ஆவது வார்டு அன்னை நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.33.18 லட்சம் மதிப்பீட்டிலும், 35-ஆவது வார்டு ஒடுக்கம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டிலும், மாநகராட்சிக்குச் சொந்தமான பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறை களில் உறிஞ்சு குழி அமைக்கும் பணி ரூ. 2.32 லட்சம் மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட லெப்பை குளம் தூர்வாரும் பணிக்கு ரூ.45.00 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.160.00 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள் ளப்படவுள்ளது. இந்நிகழ்வில், மாநகர மேயர் இளமதி, மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், துணை மேயர் ச.ராஜப்பா, மாநகராட்சி ஆணை யாளர் எஸ்.சிவசுப்பிரமணியம், 35-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதி பாசு, 48-ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் காயத்ரி உட்பட பலர் கலந்துகொண்ட னர்.