பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் காவல்துறை உத்தரவு
திருநெல்வேலி, ஜன.8- நெல்லை மாநகரில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகரில் 2022-ம் ஆண்டில் 393 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 91 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதில் 54 பேர் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது ஹெல்மெட் அணியா மல் உயிரிழந்து உள்ளனர். எனவே இருசக்கர வாக னத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பய ணத்தை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேலும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை மாநகர பகுதியில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவி டப்பட்டுள்ளது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் போது மற்றும் பின்புறத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மின்கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர் அகற்றப்படும் மின்வாரியம் அறிவிப்பு
தூத்துக்குடி, ஜன.8- தூத்துக்குடியில் மின்கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயர்கள் அகற் றப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நகர் செயற்பொறியாளர் (விநியோகம்) ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மின்வாரி யத்திற்குச் சொந்தமான மின்கம்பங்கள் மற்றும் மின்பாதை களுக்கு அடியில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொருத் தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயர்கள், பதாகைகளை அகற்றிட பலமுறை அறிவுறுத்தப்பட்டுள் ளது. இருப்பினும், அவை அகற்றப்படவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருச் செந்தூர் சாலை, தாமஸ் நகர் மற்றும் பனிமய மாதா நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயர்கள், பதாகைகள் அனைத்தும் ஜன.11ஆம் தேதி அப்புறப் படுத்தப்படும். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நகரின் பிற பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும் என மின்வாரி யம் அறிவித்துள்ளது.
நத்தம் அருகே டிராக்டரில் மோதி பைக்கில் சென்ற முதியவர் பலி
நத்தம், ஜன.8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 70). இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்குச் சாமான்கள் வாங்குவதற்கு நத்தம் வந்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சமுத்திராபட்டி பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற டிராக்டரின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னையா சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்த வரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது
விருதுநகர், ஜன.8- விருதுநகர் அகமது நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (40). இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகின்றார். இக் கடையில் பாண்டி என்ப வர் வேலை பார்த்து வருகிறார். அப்போது, சிவகாசி வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த சுப்புத்தாய்(56) என்பவர் ஆப்பிள் பழம் வாங்கியுள்ளார், பின்னர், ஒரு 500 ரூபாய் தாளைக் கொடுத்து மீதிப் பணத்தை கேட்டுள்ளார். அந்த ரூபாய் தாளை வாங்கிய தும் பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது, எனவே. அவர். கல்லாவில் கிடந்த மற்றொரு 500 ரூபாய் தாளுடன் சுப்புத்தாய் கொடுத்த 500 ரூபாயை ஒப்பிட்டுள்ளார். அதில், சுப்புத்தாய் கொடுத்த பணம் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுப்புத்தாயை அழைத்துச் சென்று பழைய பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுப்புத்தாயை கைது செய்தனர். அவ ரிடம் இருந்த மேலும் பல கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
சின்னாளப்பட்டி, ஜன.8- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளான மைக் கேல் பாளையம், காமலா புரம், கொடைரோடு, பள்ளப் பட்டி, விளாம்பட்டி, மட்டப் பாறை, அணைப்பட்டி, சித் தர்கள்நத்தம் பிள்ளையார் நத்தம், ஒட்டுப்பட்டி,நரி யூத்து ஆகிய கிராமங்களில் மல்லிகை,செவ்வந்தி,கனகாம்பரம்,கோழிக்கொண்டை,சென்டு,வாடாமல்லி ஆகிய பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. பூக்களின் விலையும் சராசரியாக 50 முதல் 100 ரூபாய் வரை செல்வதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதமான காலநிலை கார ணமாக செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. அனைத்து ரக பூக்களும் அறுவடை செய் யப்பட்டு தமிழக முழுவதும் மட்டுமின்றி கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அதிவேகத்தில் சென்ற கனரக லாரிகளால் புதிய தார்ச்சாலை சேதம் லாரியை சிறைப்பிடித்த மக்கள்
சின்னாளப்பட்டி, ஜன.8- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பொட்டிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சிறுமலை அடிவாரப் தோட்டப்பகுதி களுக்கு செல்வதற்காக,சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊராட்சி ஒன்றிய நிதி 61 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மூன்றடுக்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 7 சனிக்கிழமையன்று அந்தப் பகுதியில் தனியார் நிலத்தில் செம்மண் எடுப்பதற்காக திடீ ரென மொத்தமாக 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அதி வேகத்தில் சென்றன. இதனால் புதிய தார்ச்சாலையில் பிளவுகள் ஏற்பட்டு பெயர்ந்து சிதறும் நிலை ஏற்பட்டது.இதனால் கோபம டைந்த பொட்டிகுளம் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்து கனரக லாரிகளை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீ சார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது நீண்ட நாள்களுக்கு பிறகு தங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை சேதப்படுத்தும் விதத்தில் சென்றுவரும் டிப்பர் லாரிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் லாரி களை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்திரைத்தீர்வை செலுத்தி ஆவணங்களை பெற சிறப்பு இயக்கம்
மதுரை,ஜன.8- இந்திய முத்திரைச் சட்டம் 1899-இன் கீழ் கிரையம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சார்பதிவாளர் அலுவ லகங்களில் பதிவு செய்து உரிய முத்திரைத்தீர்வை செலுத் தப்படாமையினால் பிரிவு 47 ஏ (1), 47 ஏ (3) மற்றும் வரு வாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு நிலுவையில் உள்ள ஆவணங்களை, ஆவண தாரர்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக 01.01.2023 முதல் 31.03.2023 வரை சிறப்பு முனைப்பு இயக்கம் நடைபெறு கிறது. இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்தி ஆவணதாரர்கள் மதுரை முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியரை அணுகி தாங்கள் செலுத்த வேண்டிய குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் வட்டியினை செலுத்தி தங்கள் அசல் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகம் மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 31.03.2023-க்குள் குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் வட்டி செலுத்த தவறும் பட்சத்தில் இவ்வினம் சம்மந்தமாக சார்பதிவாளர் அலு வலக பதிவேடுகளில் உரிய பதிவுகள் செய்யப்பட்டு, மேற்படி ஆவணங்களின் பேரில் இனி எவ்வித பரிமாற்ற மும் செய்ய இயலாது. மேலும், ஆவணச் சொத்தின் மீது வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
கூடலூர் அருகே வனப்பகுதியில் மூதாட்டி சடலம் மீட்பு
தேனி, ஜன.8- கூடலூர் அருகே தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இறந்து கிடந்த மனநலம் பாதித்த மூதாட்டி. உடலை போலீ சார் மீட்டனர். தேனி மாவட்டம், கூடலூர் வனத்துறை எல்லைக்கு உபட்டது வண்ணாத்திப்பாறை காப்புக்காடு வனப்பகுதி. இங்கு கூடலூர் வன சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது வண்ணாத்திப்பாறை காப்புக்காடு வனப்பகு திக்குள் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதை கண்டனர். அவர் அருகே பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து குமுளி (லோயர்கேம்ப்) காவல்நிலை யத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கம்பம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) லாவண்யா தலைமையில் வந்த காவல்துறையினர் முகம் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த மூதாட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தடைசெயய்யப்பட்டுள்ள வனப்பகுதிக்குள் எப்படி சென்றார் என்பது குறித்து போலீ சார் விசாரித்து வருகின்றனர்.
புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது
இராஜபாளையம், ஜன.8- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தக வல் வந்தது. இதனை அடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப் படையினர் சனிக்கிழமயன்று சத்திரப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த லாரியை சோதனை செய்த போது, அதன் உள் பகுதியில் அறை அமைத்து புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டுனர் தட்டாங்குளத்தை சேர்ந்த புஷ்பராஜ், திருவில்லிபுத்தூரை சேர்ந்த கிளீனர் கூட லிங்கத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராஜபாளையம் கணபதியாபுரத்தை சேர்ந்த தந்தை மகனான ஹரி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் காந்தி சிலை, அருகே உள்ள தனியார் சந்தையில் பலசரக்கு கடை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு மொத்தமாக புகையிலை பொருட்கள் கொண்டு செல்வ தும் தெரியவந்தது. இதனை அடுத்து ஓட்டுனர், கிளீனர், தந்தை மகன் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 175 கிலோ புகையிலை பொருட் கள் அடங்கிய 196 மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் ஹரி பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி- உரிமையாளர்கள் பிடிவாதம் ஆண்டிப்பட்டியில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தேனி, ஜன.8- ஆண்டிபட்டியில் நடை பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் 6 ஆவது நாளாக வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டி பட்டி, டி.சுப்புலாபுரம், சக்கம் பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி தொழி லாளர்கள் கூலி உயர்வு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.சுப்புலாபுரம் பகுதி யில் விசைத்தறி தொழிலா ளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்து விசைத்தறிகளை இயக்காமல் உள்ளனர். இதன் காரணமாக தினந்தோ றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற் பத்தி பாதிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் இரண் டாம் கட்டமாக வெள்ளிக் கிழமை ஆண்டிபட்டி வட் டாட்சியர் சுந்தர்லால், டி.எஸ்.பி. ராமலிங்கம் ஆகி யோர் தலைமையில் தொழிற் சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விசைத்தறி உரிமையா ளர்கள் இதொழிலாளர் களின் கோரிக்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்த னர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. சனிக் கிழமை 6வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
மதுரை, ஜன.8- மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிரா மங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in இணை யதளம் மூலம் பதிவு செய்திடல் வேண்டும். காளையுடன் ஒரு உரிமையாளர் காளை யுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்து கொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடை பெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்க ளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதா வது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின் பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளி யை கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்ச மாக 150 பார்வையாளர்கள் அல்லது அனு மதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வை யாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி யிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை ( RT - PCR Test ) என்ப தற்கான சான்று ஆகியவற்றை வைத்தி ருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார் கள். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக் கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படு கிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அர சினால் விதிக்கப்படும் கொரோளா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது.
நல்லெண்ணெய், பாமாயில் விலை உயர்வு
விருதுநகர், ஜன.8- விருதுநகர் சந்தையில் நல்லெண் ணெய் விலையானது திடீரென உயர்த் தப்பட்டுள்ளது, ஒரே வாரத்தில் 15 கிலோ ரூ.330 அதிகரித்ததால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். நல்லெண்ணெய் : விருதுநகர் சந்தை யில் அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளி யிடப்பட்டு வருகிறது. அதில் நல்லெண் ணெய் விலையானது திடீரென அதிக அள வில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 15கிலோ நல்லெண்ணெய் விலை ரூ. 5940-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.330உயர்ந்துள் ளது. எனவே, அதன்படி டின் ஒன்று ரூ. 6270 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாடிக்கையா ளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மல்லி: அதேவேளை, மல்லி விலையா னது சற்று குறைந்துள்ளது. அதாவது, கடந்த வாரம் 40கிலோ மல்லி மூடையின் விலை ரூ.4100-4300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன் றுக்கு ரூ.300 குறைந்துள்ளது. அதன்படி, ரூ.3800-3900 என்ற விலைக்கு விற்கப்படு கிறது. உருட்டு உளுந்து: இதேபோல், 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு) ரூ.11,200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.200 குறைக்கப்பட்டு தற்போது ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையா கிறது. மேலும், உருட்டு உளுந்து ( பர்மா எப்.எ.க்யூ) மூட்டை ஒன்றுக்கு ரூ.8,700க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.300 வரை குறைக்கப்பட்டு ரூ.8,400க்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு மேலும், கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பயறு ( இந்தியா) லைன் மீடியம் விலையானது ரூ. 9300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.9100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, பிற உணவுப் பொருட்க ளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.
மாநில அளவிலான கேரம் போட்டியை இந்தாண்டு தஞ்சையில் நடத்த முடிவு
தமிழ்நாடு கேரம் விளையாட்டு சங்கத்தின் தலைவர் தகவல்
தஞ்சாவூர், ஜன.8- மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டி கள் நிகழாண்டு தஞ்சாவூரில் நடத்தப்படும் என தமிழ்நாடு கேரம் விளையாட்டு சங்கத்தின் தலை வரும், தஞ்சாவூர் மாநகராட்சி மேயருமான சண்.ராம நாதன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேயர் சண். ராமநாதன் கூறுகையில், “தமிழ்நாடு கேரம் விளை யாட்டு சங்கத்தின் தலைவராக நான் தேர்வு செய்யப் பட்டுள்ளேன். இந்த விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்க, வகையில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். இந்தாண்டு தஞ்சா வூரில் மாவட்ட அளவிலான போட்டிகளும், மாநில அள விலான போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த 50 ஆவது தேசிய சீனியர் கேரம் சாம்பியன் போட்டியில், பெண்கள் அணியில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தமிழ்நாடு கேரம் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, வெற்றி பெற்றவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். இந்த விளையாட்டை வரும் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல கட்டப் போட்டிகள் நடத்தப்படும்” என்றார். முன்னதாக தமிழ்நாடு கேரம் சங்கத்தின் செயலாளர் நாசர் கான், பொருளாளர் மரிய இரு தயம், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கேரம் சங்க நிர்வாகிகள் மேயர் சண்.ராம நாதனை சந்தித்து, சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.