districts

img

மன நோயாளி பேச்சை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய காவல் ஆய்வாளர்

தேனி, பிப்.24- மன நோயாளியின் வீடியோ பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ,அதை சமூக வலைதளங்களில்  பரப்பியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(31). ஜாலிக்காக இரு சக்கர வாகனம்  திருடிய இவரை தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் கடந்த 19-ம் தேதி விசாரித்தனர். அப்போது இவரது வாக்குமூலத்தை மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த நபர் எழுத்துத் தமிழில், வர்ணனையாக பேசியது காவல் ஆய்வாளர் மதன கலா முன்னிலையில்  வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ பதிவில் ராமகிருஷ்ணன், எழுத்து வடிவிலான  மொழியில் பேசியுள்ளார் .பல்வேறு செயல்களை உளறி உள்ளார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது  தொடர்பாக பத்திரிகையாளர்கள் ,காவல்நிலையம் சென்று விசாரித்த போது ,மன நோயாளியாக தெரிகிறது ,அவரை அனுப்பி விட்டோம் என தெரிவித்தனர் . விசாரணை செய்த அதிகாரி சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணனை அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்வது தவறில்லை .அவரது மேல் அதிகாரிக்கு அனுப்புவது தவறில்லை .ஆனால் அந்த மனநோயாளியிடம்  வாக்கு மூலம் பெறுவது போல் அவரை கேலி செய்தும் ,பேச்சை ரசித்து சிரிப்பது, நன்றி கூறுவது ,அந்த வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது  கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள், காவல் ஆய்வளருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.