districts

ஒட்டன்சத்திரம் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரின் கார் ஓட்டுநர் உடல் எரிப்பு

ஒட்டன்சத்திரம், ஆக.20-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் ஒன்றியம் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளராக இருப்பவர் என்.பி.நடராஜ் இவர் தனது சொந்த ஊரான அம்பிளிக்கையில் நெய் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி  வருகிறார். இந்நிறுவனத்தில் தேனி மாவட்  டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் பணி யாற்றி வந்தார். வடிவேல் தனது உறவினர் சுரேஷ் (வயது 29) என்ற வாலிபரை அழைத்து வந்து அம்பிளிக்கை நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியில் சேர்த்து விட்டார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜின் காருக்கும் ஓட்டுநராக செல்வார். சுரேசுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனது தாய், தந்தையுடன் அம்பி ளிக்கையில் வசித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இதனையடுத்து உறவினர் வடிவேல் இறந்த சுரேசின் உடலை அம்பிளிக்கை மயானத்திற்கு கொண்டு வந்து இரவோடு இரவாக தீ வைத்து உடலை எரித்து விட்டாராம். சுரேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அம்பிளிக்கை காவல்நிலையத்தில் கிராம  நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ் புகார்  அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் மரணம் குறித்து தீவி ரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது குறித்து தலைமறைவாக உள்ள சுரேசின் உறவினர் வடிவேலுவை போலீசார் தேடிவருகின்றனர். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜிடம் போலீசார் இது குறித்து விசா ரணை நடத்தினர்.  விசாரணையில் அதிமுக ஒன்றிய செய லாளர் என்.பி.நடராஜிக்கு சொந்தமான நெய் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ 6 லட்சம்  வரை சுரேஷ் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த வியா ழக்கிழமை (17.8.23) நடந்த பஞ்சாயத்தில் ரூ 3.50 லட்சம் பணத்தை சுரேஷ் திரும்பக் கொடுத்துள்ளார். மீதி பணத்திற்கு தேனி மாவட்டத்தில் சொந்த ஊரில் உள்ள இடத்தை எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்தின்போது தாக்கப்பட்ட தில் சுரேஷ் மயங்கி விழுந்தார். ஒட்டன்சத்தி ரம் தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது சுரேஷ்  ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாகவும், அதன் பிறகு உற வினர் வடிவேல் சுரேசின் உடலை மயா னத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் கூறப்  படுகிறது.