districts

img

நீ...ண்டு கொண்டேயிருக்கும் பாதாளச் சாக்கடைப் பணி தினம்தோறும் அல்லல்படும் மக்கள்

மதுரை, மே 12- மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்... விவசாயத் திற்கு உதவியாக இருக்கும். குறித்த காலத்தில் மழை பெய்ய வில்லையென்றால் மழை வேண்டிய பிரார்த்தனை செய்யும் மக்கள் இன்றைக்கும் உள்ளனர். கோவில்களில் மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனைகளும் நடை பெறும். மதுரை மாநகராட்சிப் பகுதிக ளில் வசிக்கும் மக்கள் மழையா... வேண்டவே வேண்டாம்... எனக் கூறுமளவிற்கு உள்ளது மதுரை நகர் சாலைகள். மக்கள் வேத னைப்படுவதற்கு முக்கியக் காரணம் பாதாச்சாக்கடை பணிகள் தான். மாநகராட்சிப் பகுதிகளில் வேலை நடக்கிறது... நடக்கும்... நடந்துகொண்டேயிருக்கும்...  பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெறும் விளாங்குடி, அஞ்சல் நகர், கூடல்நகர் பகுதியில் பத்து நிமிடம் தூறல் விழுந்தால் போதும். மக்கள் உயிரைப் பணயம் வைத் துத்தான் தங்களது வீடுகளுக்கு செல்லமுடியும். உதாரணத்திற்கு விளாங்குடி செம்பருத்தி நகர்  பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள வடி கால் அமைக்க, மூன்று மாதங்க ளுக்கு முன், சாலைகள் தோண்டும்  பணி துவங்கியது. சமீபத்தில் பெய்த மழையால் தோண்டப்பட்ட சாலைகள் மக்கள் நடக்கமுடியாத அளவிற்கு மோசமாக மாறி யுள்ளது. பூங்கா சாலை, ஐயப்பன் தெரு,  வெங்கடாசலபதி நகர், கணபதி நகர், சொக்கநாதபுரம் முதலாவது தெரு, சொக்கநாதபுரம் இரண்டா வது தெரு மற்றும் விளாங்குடி யின் பல பகுதிகளில் வசிப்பவர் கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளனர்.  நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல், சாலையோரம் நடந்து, ஆட்டோ ரிக்‌ஷாவில் பிரதான சாலையை அடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர்.

செம்பருத்தி நகர் மக்கள் கூறு கையில், ஆம்புலன்ஸ் உடனடி யாக வரமுடியாது. சமீபத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வாகனமும் உள்ளே வர முடியவில்லை என்றனர். சுப்பையா என்பவர் கூறு கையில் 20- ஆவது வார்டு பகுதி யில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இங்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பணி களுக்கான பணிகள் கடந்த சில  மாதங்களாக நடைபெற்று வரு கிறது இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி யான முறையில் மூடப்படாததால் சாலையோரங்களிலும் மற்றும் சாலையின் மையப்பகுதிகளிலும் மண் குவிந்து கிடக்கிறது. இத னால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது என்றார். விளாங்குடி பிரதான சாலை யிலிருந்து சொக்கநாதபுரம் முத லாவது தெருவிற்குள் நுழையும் இடத்தில்  பெரும் மண்குவியல் உள்ளது. மண்ணை அப்புறப் படுத்தாததால் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆண்- பெண்களுக்கான கழிப்பிடங்கள் பயன்பாடில்லாமல் உள்ளது.  சொக்கநாதபுரம் 2-ஆவது தெரு வில் வசிக்கும் சங்கரபாண்டி  கூறு கையில்,  15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாய், பாதாளச் சாக்கடை க்கு என்று பள்ளங்கள் தோண்டு கிறார்கள் அதை சரியாக மூடுவ தில்லை. பள்ளங்கள் தோண்டும் போது ஏற்கெனவே உள்ள குழாய்கள் உடைந்துவிடுகின்றன.  தண்ணீர் வெளியேறி சாலை சகதிக்காடாக மாறிவிட்டது. அவ்வப்போது மழை வேறு பெய்து வருவதால் வீட்டிலிருந்து கடைகளுக்குச் செல்வதே சவா லாக உள்ளது. மாநகராட்சி அதிகா ரிகளோ பொருட்கள் வரவில்லை பணியாட்கள் வரவில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டயிருக்கின்றனர் என்றார்.

பாதுகாப்பிற்கு தேவை போலீஸ்

மற்றொருபுறத்தில் மதுரை-அலங்காநல்லூர் சாலையில் உள்ள அஞ்சல்நகரிலிருந்து கூடல்நகர் செல்வதற்குள் மக்கள் படும் அவஸ்தைக்கு எல்லை இல்லை.  பொதுவாக இந்தச் சாலை போக்கு வரத்து நெரிசல் மிக்கது. சாலை யின் இரு புறமும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிக மாககி எப்போது என்ன நடக்கும் எனத் தெரியாமல் இருசக்கர வாக னங்கள் தப்பிப்பிழைத்துப் பயணித்து வருகின்றனர். பாதாளச்சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையும் வரை மக்களின் பாது காப்புக்கருதி அஞ்சல்நகர் முதல் கூடல்நகர் வானொலிநிலையம் வரை சுழற்சி முறையில் காவலர் களை பணியிலமர்த்தி தப்பிப் பிழைத்தால் போதும் என பய ணிக்கும் மக்கள் இனி நிம்மதியா கப் பயணிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

வண்டியூர் பகுதி

மாநகராட்சி 40- ஆவது வார்டு வண்டியூர் பாலாஜி நகர், பி.கே.எம். நகர், சுந்தர் நகர், செந்தூர் நகர் உட்பட பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியு மாக உள்ளது. பிகேஎம் நகர் பகுதி யில்  தெருவில் நடந்து செல்ல முடி யாத நிலை உள்ளது. மக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழு கின்றனர் என்றனர் பாலாஜி நகரைச் சேர்ந்த வீரணணன் மற்றும்  கணேசன். மேற்கண்ட குடியி ருப்புப் பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் தேங்கியுள்ளது. பல இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணி நிறைவு பெற்றிருந்தாலும் தோண்டிய பள்ளத்தினை  சரியாக மூடாததால் தான் இந்த நிலை என்கின்றனர் மக்கள்.

சதாசிவம் நகர் பகுதி

மாநகராட்சி 39-ஆவது வார்டு க்கு உட்பட்ட சதாசிவம் நகர் பகுதியில் உள்ள நக்கீரர் தெரு, மீனாட்சி தெரு, கபிலர் தெரு உள் ளிட்ட சுமார் இருபது தெருக்கள்  சேறும், சக்தியுமாக மாறி கால் வைக்கக் கூட இடமில்லாத நிலை  உள்ளது. 

-நமது நிருபர்கள்