districts

img

‘துறவியர் மாநாடு’ என்ற பெயரில் விஷம் கக்கிய சாமியார்கள் மதுரை மண்ணிலிருந்து வெறுப்பை விதைத்த ஆர்எஸ்எஸ்- விஎச்பி கும்பல்

மதுரை, ஜூன் 6- மதுரையில் விஎச்பி ஆதர வோடு துறவியர் மாநாடு சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆதீனங்கள், துறவிகள், விஎச்பி தலைவர்கள் தமிழகத்தின் மதச் சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கினர். கம்யூ னிஸ்ட்டுகள், கிறித்தவர்கள், முஸ் லிம்களை வசைமாறி பொழிந்தனர். மதுரை மீனாட்சியம்மனையும் கேலி செய்ததோடு அவதூறுச் சேற்றை அள்ளி வீசினர். மதுரை ஆதீனம் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். துற விகள் திமுக அரசை மிரட்டினர். ஒட்டுமொத்தத்தில் “துறவியர் மாநாடு” என்ற பெயரில் வெறுப்பைக் கக் கும் மாநாடாக நடைபெற்றது. மாநாட்டில், மதுரை ஆதீனம் பேசியதாவது: மடாதிபதிகள், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாதாம். இப்படிச் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு கோவில்களில் என்ன வேலை? கோவில்களில் அரசு கை வைக் கக்கூடாது. அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மோசமாக உள்ளது. முன்பு கோவில்கள் சமுதாயக் கூடங்களாக இருந்தன. இப்போது கோவில்களில் ஒன்றுமில்லை; வருமானமும் இல்லை.

1974-ஆம் ஆண்டு தான் கோவில்  களில் அரசியல் புகுந்தது. இன் றைக்கு கோவில்களில் உள்ள தங்கங்களை உருக்கப்போகிறோம் என்கின்றனர். என்னை ‘‘சங்கி’’ என்  கிறார்கள். நான் என்ன ‘‘சங்கியா”? சாமிகளை துர்தேவதைகள் என்கின்றனர். அங்கு வைக்கப் பட்டுள்ள உண்டியல் மட்டும் இஷ்ட தேவதைகளாக உள்ளது. அறநிலை யத்துறையின் உண்டியல்களில் காசு போடாதீர்கள். மீனாட்சி யம்மன் கோவில் திருவிழாவில் கட வுள்கள் மட்டுமே வருவர். இப் போது உண்டியலும் சேர்ந்தே வரு கிறது. அது வேறொங்கோ செல்கி றது. கோவில் நிலத்திற்காக குத்தகை பாக்கியை, வாடகைப் பாக்கியைத் தர மறுப்பவர்கள் அடுத்த பிறவி யில் வௌவாலாகத்தான் பிறப் பார்கள். இன்றைக்கு திருக்கோவில்கள் கலகலத்துப் போய்விட்டன. அற நிலையத்துறையில் எல்லாமே ‘‘காசுதான்’’. அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் இடமாக திருக்கோவில்கள் மாறிவிட்டன. கிறிஸ்தவர்கள் தசமபாகம் தருகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு  குறிப்பிட்ட தொகையை வழங்கு கிறார்கள். இந்துக்கள் மட்டுமே ‘‘பையில் இருந்து எடுத்து நைசா’’ கொடு என்கிறார்கள். ஒருவர் நோட்  டீசோடு வருகிறார். என்னவென்று கேட்டால் கோவில் திருவிழா என்கி றார்கள். ஒரு கல் வேண்டுமெனக் கேட்கிறார்கள். விலை என்னவா கும் எனக் கேட்டால் ரூ. 5 லட்சம் ஆகும் என்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். விஎச்பி அகில உலகப் பொதுச் செயலாளர் மிலித் பிராண்டே பேசு கையில், இந்து மதத்திற்கு மிகப் பெரிய அபாயம் மட்டுமல்ல, கேடு விளைவிப்பவர்கள் பொதுவு டைமை பேசும் கம்யூனிஸ்ட்டுகள் என்று வன்மத்தை விதைத்தார்.

தமிழகத்தில் பயங்கரமான சூழல் நிலவுகிறது என்றும் வட தமி ழகத்திலும், தென் தமிழகத்திலும் இந்துக்கள் மீது தாக்குதல் நடை பெறுகிறது என்றும் பொய்களைக் கட்டவிழ்த்தார். மதுரை சின்மயானந்தா ஆசி ரமத்தைச் சேர்ந்த சிவயோகானந்தா  பேசுகையில், அரசு துறவிகள் விஷ யத்திலும், கோவில்கள் விஷயத்தி லும் தலையிடக் கூடாது. அப்படி தலையிட்டால் இந்துக்கள் திரள  வேண்டும். சமஸ்கிருதம் ஆரி யர்கள் மொழி. தமிழ் மொழி வேறு எனக் கூறி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்த, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று கூறிக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த பெண் சாமியார் யத்தீஸ்வரி பேசுகையில், கல்வி நிலையங்களில் அறவழிக் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குரு குலக் கல்வி அவசி யம். இது தொடர்பான பாடத்திட்டம்  தேவை. பள்ளிகளில் வாரம் ஒரு முறை இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பேசுகையில், “மடத்தைப் பாது காக்கக் கோரி ஒரு தீர்மானமா? மடத்தை அரசு பாதுகாக்க வேண் டும்.

தீண்டாமை, தீண்டாமை எனக் கூறி நாட்டை ஏமாற்றுகிறார்கள்” எனப் பிதற்றினார். மன்னார்குடி ஜீயர் பேசுகையில், பல மதங்கள் நாட்டிற்கு துரோகம் இழைக்கின்றன. முசல்மான்கள் தேச துரோகிகள். நடராஜர் கோவில்  வாசலில் சிலர் நின்று கொண்டு, தங்களை இந்துக்கள் எனக் கூறி  இந்து மதத்திற்கு எதிரான பிரச்சா ரம் செய்கிறார்கள். இந்தியா அகண்ட பாரதம். இங்கு வசிப்ப வர்கள் இந்துக்கள் தான். இவர்கள் தான் மதம் மாறியுள்ளனர். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், வங்கதேசம் ஆகியவை யும் அகண்ட பாரதம் தான். அங்கு  வசிப்பவர்கள் மதம் மாறிய இந்துக்  கள். அகண்ட இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம் என்று கூறி, இது ஆர்எஸ்எஸ் மாநாடுதான் என்பதை  உறுதி செய்தார். விஎச்பி இணை பொதுச் செயலா ளர் பேசுகையில், ஆட்சியாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். உங்களுக்கு பாடம் புகட்டக் கூடியிருக்கிறோம். தர்மத்தை பாதுகாக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தான்  தமிழக அரசின் சின்னமாக உள்ளது.  தர்மத்தை நிலை நாட்ட துறவி யர்கள் தயங்க மாட்டார்கள் என்று  தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத் தார். ச.நல்லேந்திரன் ஜெ.பொன்மாறன்