பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினி யின் வீட்டுக்கு மே 11 வியாழனன்று வருகை தந்த கவிஞர் வைரமுத்து மாணவிக்கு தங்க பேனாவை பரிசளித்தார். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி இன்று உலகம் முழுவதும் அறி யப்படும் வகையில் புகழ்பெற்றுள்ளார். அதற்குக் காரணம் கல்விதான். மாணவி மற்றும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரி யர்களையும் மாணவிக்கு ஊக்கமாக இருந்த பெற்றோரையும் பாராட்டுகிறேன் என்று கவி ஞர் வைரமுத்து தெரிவித்தார்.