சிவகாசி, அக்.8- சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சி யில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காந்திஜெயந்தியையொட்டி விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்பு ணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் ஆர்.எஸ்.லீலாவதி சுப்பு ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பி னர் பி.மங்கம்மாள் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி கருத்துரையாற்றினார். பின்பு, அனை வரும் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் ஊராட்சி செயலர் என்.அருள்ராஜ் நன்றி கூறினார். மேலும் இதில், மகளிர் சுயஉதவிக்குழு வினர் மற்றும் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.