districts

img

மாநகராட்சியைக் கண்டித்து விளாங்குடியில் மறியல்

மதுரை, ஜூன் 11- மதுரை-குலமங்கலம் பிர தான சாலை எப்போது சீரமைக்கப்  படும் எனத் தெரியாமல் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், மக்களும் மதுரை மாந கராட்சியை தினம்தோறும் வசை பாடி செல்கின்றனர். கடந்த 18  மாதங்களாக மக்கள் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். மதுரையில் குடிநீர் குழாய்  பதிக்க செல்லூர் - ஆலங்குளம்  இடையே, குடிநீர் குலமங்கலம் பிர தான சாலை தோண்டப்பட்டுள் ளது. சர்க்கஸ் காரர்களாக ஒவ்வொ ருவரும் மாறி இந்தச் சாலையை கடக்கின்றனர். இதைப் பற்றி மாந கராட்சி துளியும் கவலைப்பட வில்லை.

இரு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு சாலை  மோசமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மாமன்ற டி.குமரவேல் (வார்டு 23)  கூறியதாவது: மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த பல மாதங்களாக இப்பிரச்  சனையை எழுப்பி வருகிறேன். ஆனால், முல்லைப் பெரியாறு குடி நீர் திட்டத்திற்காக நிலத்தடியில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணி  நடைபெறுகிறது என்று அதிகாரி கள் கூறிக்கொண்டேயிருக்கின்ற னர் என்றார். இப்பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் அக்  கறை காட்டுவதில்லை என பகுதி வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களில் ஒருவர் கூறுகையில், “சாலையை எங்காவது தோண்டி,  நீண்ட அப்படியே போட்டுவிட்டு மீண்டும் வேறு இடத்தில் சாலை யை தோண்ட வருகிறார்கள். என்ற னர். லாரிகள் கூட பெரிய பள்ளங்க ளில் சிக்கி மண் அள்ளும் இயந்தி ரங்களால் மீட்கப்பட்டதாக வாகன  ஓட்டிகள் இப்போது, ஷேர்-ஆட்டோக் கள் கூட இந்த சாலையைப் பயன்படுத்துவதில்லை. சாலை கள் மோசமாக இருப்பதால் ஆட்டோக்களும் வருவதில்லை. பயணிகளும் இந்தச் சாலையில் பயணிக்க விரும்பவில்லை.  குறைந்தபட்சம் இரு சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்வதற்கு ஏற்ற வகையில் முதற்  கட்டமாக சாலையை சீரமைக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்  கள்.

மதுரை-அலங்காநல்லூர் சாலை

மதுரை-அலங்காநல்லூர் பிரதான சாலையில் அஞ்சல்நகரிலி ருந்து (இந்தியன் வங்கி) கூடல்நகர் பேருந்து நிறுத்தம் வரை தினம்  தோறும் போக்குவரத்து நெரிசல். இதற்குக் காரணம் குடிநீர் குழாய்  பதிக்கும் பணிகள் நிறைவடையா தது தான். போதாக்குறைக்கு சாலையின் இரண்டுபுறமும் மது பானக் கடைகள். இந்தச்சாலையில் உயிர் தப்பிச் சென்றால் போதும் என மக்கள் சென்றுவருகின்றனர். காலை-மாலை நேரங்களில் காவ லர்களை சுழற்சி முறையில் பணி யமர்த்தி போக்குவரத்து சிக்க லைத் தீர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை மதுரை மாநகர் காவல்துறை நிறைவேற்றாமல் மௌனமாக உள்ளது.

மெத்தனத்தை கண்டித்து மறியல்

இதற்கிடையில் மதுரை மதுரை  மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி பொற்றா மரை நகர் பகுதியில் சுமார் 200-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அந்தப்பகுதியில் பாதா ளச் சாக்கடை, குடிநீர் இணைப்  புக்காக சாலைகள் தோண்டப்  பட்டதால் மக்கள் கடந்த ஆறு  மாதங்களாக அவதிப்பட்டு வரு கின்றனர். இந்த நிலையில் தன்னெழுச்சி யாகத் திரண்ட மக்கள் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை யில் விளாங்குடியில் மறியல் செய்த னர். வழக்கம் போல் காவல்துறை யினர், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் கலைந்து சென்றனர்.