சவூதியில் உயிரிழந்த மீனவர் உடலை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு
இராமநாதபுரம், நவ.14- இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.தாலுகா திருப்ப லைக்குடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன். மீன்பிடி தொழிலாளியான இவர் சவுதிஅரோபியா கத்தீப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவ ருக்கு ஞானமுத்து மனைவியும். இசை அமுதன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 11.11.2022 அன்று இரவு சவுதி கத்தீப்பில் இருந்து முனீஸ்வரன் இறந்து விட்டதாக அவரு டன் வேலைக்குச் சென்ற பெரியம்மா மகன் விமல் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சவுதியில் உயிரி ழந்த தனது கனவர் உடலை மீட்டு கொண்டு வர வலி யுறுத்தி திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட் டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முனீஸ்வரன் மனைவி மற் றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
தொடர் மழை: பழனியில் 5 வீடுகள் இடிந்தது
பழனி, நவ.15- பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த மாரியம் மாள் (54) என்பவரது வீட்டின் பின்பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. ஆயக்குடியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (48) என்பவரின் வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. தகவறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டனர். அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் பழனி, ஆயக்குடி, கோதைமங்க லம் ஆகிய பகுதியில் ஐந்து வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவார ணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தேனியில் கூட்டுறவு வார விழா அமைச்சர் இ.பெரியசாமி கொடியேற்றினார்
தேனி, நவ.14- தேனியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு வேளாண் விளைபொருள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடை பெற்ற விழாவில் கலந்து கொண்டு கூட்டுறவுக் கொடியை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஏற்றி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தி.சுப்பிர மணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் கே.எஸ்.சரவணக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் து.ஆரோக்கியசுகுமார், தேனி அல்லி நகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், நாராயண பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவலர் குடும்பத்திடம் நகை பறிப்பு
பழனி, நவ.14- பழனி தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலன் இவர் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் ஞாயிறன்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். பழைய தாராபுரம் ரோடு பாலாஜி மில் அருகே வந்த மூவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் மனைவியிடம் அணிந்திருந்த செயினைப் பறித்த னர். சம்பவம் தொடர்பாக பழனி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பணம்- கைபேசி பறித்தவர் கைது
இராமேஸ்வரம், நவ.14- மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மாரி யப்பன் இவரது மகன் சந்தோஷ்குமார்(23) உச்சிப்புளி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீடியோ கேம் விளையாடுவதில் செம்படையார் கிரா மத்தைச் சேர்ந்த வினோத் (30), தினேஷ்(29) ஆகிய இரு வருடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளர். இந்நிலையில், வினோத் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு தன்னி டம் ஐபோனுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்போன் இருப்ப தாகக் கூறியதுடன், அதன் விலை ரூ.10 ஆயிரம் எனத் தெரி வித்துள்ளனர். இதனை நம்பி சந்தோஷ்குமார் அவனது நண்பரான யோகேஸ்வரனுடன் இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயன்பாடு இன்றி உள்ள பெருங்குளம் சுங்காச்சாவடி அருகே வந்துள்ளனர். இரண்டு பேரையும் அழைத்து சென்றவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சந்தோஷ்குமாரிடமிருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கம், 20 ஆயிரம் மதிப்பிலான கைபேசி ஆகியவற்றை பறித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சந்தோஷ்குமார் உச்சிப்புளி காவல் நிலையத்தில அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ் கைது செய்தனர். செம்படையாளா குளம் கிரா மத்தைச் சேர்ந்த வினோத், சின்னமணி, இந்துகுமார் ஆகிய மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
கூட்டுக்குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை
கடமலைகுண்டு, நவ.14- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு 1¼ வயதில் பிரவீன்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. அருண்குமார் வீட்டின் முன்பாக மதுரைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல குழாய்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆத்துக்காடு பகுதியில் மழை பெய்து வருவதால் குழாய் அமைப்ப தற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் நீர் தேங்கி யுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்த பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக வீட்டில் முன்பாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். மழை நீர் தேங்கி இருந்ததால் அவரால் பள்ளத்தை விட்டு வெளியேற முடியாமல் நீரில் தத்தளித்துள்ளார். சில நிமிடங்களில் குழந்தை அதிகளவு நீரைக் குடித்து சுவா சிக்க முடியாமல் மயக்கம் நிலைக்குச் சென்றுவிட்டார். தற்செயலாக வெளியே வந்த அருண்குமார் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காண வில்லையே என அருகில் தேடியுள்ளார். அப்போது பள்ளத்தில் கிடந்த நீரில் குழந்தை பிரவீன்குமார் மயக்க நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் குழந்தையை மீட்ட அருண்குமார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து குழந்தையின் வயிற்றில் இருந்து நீரை முழுமை யாக வெளியேற்றினர். சில மணி நேர சிகிச்சைக்கு பின்பு குழந்தை அபாய கட்டத்தை தாண்டியது. தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
தேனி, நவ.14- தேனி மாவட்டத்தில் மழை குறைந்த தால் நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து வைகையில் தண்ணீர் திறப்பு குறைக் கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பி விட்டன. மூலவைகை ஆறு, முல்லைப் பெரியாறு, வராகநதி உட்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்தக் கொள்ளளவு 71 அடி யாகும். வழக்கமாக 69 அடி வரை தண்ணீர் தேக்கப்படும். இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதி காரிகள் கண்காணித்து வருகின்றனர். பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணை யின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் அணையின் பாது காப்புக் கருதி உபரிநீர் 10 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. ஞாயிறன்று 5150 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஞாயிறன்று மாலை முதல் மழைப்பொழிவு குறைந்ததால் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டு 1866 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது. அணைக்கு 3625 கன அடி நீர் வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1109 கன அடியாக உள்ளது. அணை யின் நீர்மட்டம் 137.25 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள் ளது. 190 கனஅடி நீர் வருகிறது. அது அப்ப டியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத் துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி யாக உள்ளது. அணைக்கு வரும் 252 கன அடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழையளவு தேக்கடி 6.4, போடி 6.4, வைகை அணை 4, சோத்துப்பாறை 5, மஞ்சளாறு 6, பெரியகுளம் 3.2, வீரபாண்டி 3.6, அரண் மனைப்புதூர் 1, ஆண்டிபட்டி 4.2 மி.மீ.
வனத்துறையைக் கண்டித்து போராட்டம்: 58 பேர் கைது
தேனி, நவ.14- வனத்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஹைவேஸ் பேரூராட்சி பொது மக்கள் 58 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோடை வாசஸ்தலமாக விளங்கும் ஹைவேவிஸ் பேரூராட்சிப் பகுதியில் உள்ள ஏழு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில் தென்பழனி சோதனைச் சாவடியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. இதில் மாலை ஆறு மணிக்கு மேல் மக்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கண்டித்து திங்கட்கிழமை காலை வனத்துறை சோதனை சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேர் கைது செய்யப் பட்டனர்.
கிணற்றில் மூழ்கி பலி
திருவில்லிபுத்தூர், நவ.14- திருவில்லிபுத்தூர் மங்காபுரம் வடக்குத் தெருவில் வசிப்பவர் மகேஷ்வரன் (25) சம்பவத்தன்று இவர் ஆல டிப்பட்டி ஆலம்மாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு பத்து ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர், நவ.14- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பாண்டியன் நகரில் வசிப்பவர் கூலி லோகநாதன் (58) இவர் வீட்டு அருகே ஒரு கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லோகநாதனை கைது செய்து திருவில்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத் தடுப்பு அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த் குற்றசாட்டப்பட்ட லோகநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அப ராதம் விதித்து தீர்ப்புக் கூறினார்.
பேருந்திலிருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் பலி
அருப்புக்கோட்டை, நவ.14- அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தர். அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையா புரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் மாதேஸ்வரன் (19). இவர் விருதுநகர் அருகே உள்ள தனியார் கல்லூரி யில் இளங்கலை வேதியியல் பாடப்பிரிவில் இரண்டா மாண்டு பயின்று வந்தார். திங்களன்று கல்லூரிக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். கல்லூரி அருகே வந்த போது, எதிர்பாராவிதமாக தடுமாறி சாலை யில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கார ணத்தால், சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரன் உயிரி ழந்தார்.
சட்டவிரோத நடவடிக்கை காவல்துறை ஆய்வாளருக்கு தடை
தேனி, நவ.14- உத்தமபாளையத்தில் கடந்த 2017, நவ.22-ஆம் தேதி குடும்பப் பிரச்சனையில் ஏரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ் (31) என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு எரித்து கொலை செய்த வழக்கில், உத்தமபாளையத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(46) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த நவ.8-ஆம் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில், உத்தமபாளையம் காவல் நிலைய காவல்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், இரண்டாவது குற்றவாளியாக உத்தமபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டியன் மகன் ராஜேஷ்குமார் என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். ராஜேஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை இந்த வழக்கிலி ருந்து விடுவித்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். இந்த வழக்கில் சட்ட விரோதமாக ராஜேஷ்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 29 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே, விசாரணை அதிகாரியின் சம்பளத்திலிருந்து இழப்பீடு பெறுவதற்கு அவர் தகுதி யுள்ளவராகிறார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக செயல்பட்ட அப்போதைய உத்தமபாளையம் காவல் ஆய்வாளரும், தற்போதைய சிவகங்கை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளருமான ராமகிருஷ்ணன் மீது, காவல் துறை நிர்வாகம் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மூன்று ஆண்டுகளுக்கு அவரை விசாரணை அலுவலராக நியமிக்கக் கூடாது. அவர் ஏற்க னவே விசாரணை அலுவலராக செயல்பட்டு வரும் வழக்கு களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியம் நிறுத்தம் முதல்வருக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை
சிவகங்கை, நவ.14- வயதான மூத்தோர்கள், மாற்றுத் திற னாளிகள், விதவைப் பெண்களுக்கு நிறுத் தப்பட்ட ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து வாலிபர் சங்க சிவகங்கை மாவட்ட மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட் டச் செயலாளர் வழக்கறிஞர் ஜேம்ஸ், மாவட்ட பொருளாளர் இன்னாசிராஜா ஆகியோர் கூறி யதாவது: இரண்டு சிலிண்டர்கள் உள்ள வர்கள், வங்கியில் நகைக் கடன் பெற்ற வர்கள், சொந்த வீடு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் மாதம் தோறும் ரூ1000 வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சாதரண ஏழைகளின் மாத ஒய்வூதியம் ரூ1000-த்தை நிறுத்தியிருப்பது வருத் தத்திற்குரியது. தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் வழங்கப்பட்ட ஒய்வூதியத் தொகையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரை சந்திக்க சாலை ஆய்வாளர்கள் முடிவு
விருதுநகர், நவ.14- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய் வாளர்கள்) சங்கத்தினர், வரும் நவ.23-ஆம் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சரை நேரில் மனு அளித்து முறையீடு செய்ய முடிவு செய் துள்ளனர். இதுகுறித்து மாநிலப் பொதுச் செய லாளர் சி.குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் திறன்மிகு உதவியாளர்கள் ஒன்பது சாலை ஆய்வாளர்கள்) பணிஇடத்தை நிரந்தர பணி வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். ஆறு ஆண்டுகள் கடந்தும் தகுதியா னோருக்கு இளநிலை வரை, தொழில் அலு வலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இள நிலை பொறியாளர் காலிப் பணியிடங் களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிரப்ப வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை போல், திறன்மிகு உதவியாளர் நிலை-1, நிலை-2 ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சம ஊதியம் வழங்க வேண்டும். பயணப்படி வழங்க வேண்டும். தற்போது உள்ள சுமார் 65ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஏற்ப திறன்மிகு உதவியாளர் பணியிடங்களை நிரப்பி பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்பட வில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.,23-ஆம் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரை நேரில் மனு அளித்து முறையீடு செய்யப் படும்.
இலந்தைகுளம் கண்மாய்க்கு தேவை வைகை தண்ணீர்: விவசாயிகள் கோரிக்கை
சிவகங்கை, நவ.14- சிவகங்கை மாவட்டம் சாத்தனூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய மாநாடு கணேசன் தலைமை யில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் மணியம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் மோகன், துணைச் செயலாளர் ஆறுமுகம், சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றி யத் தலைவராக கணேசன், ஒன்றியச் செய லாளராக பாலு, பொருளாளராக பழனி குமார், துணைத் தலைவராக பாக்கியம், துணைச் செயலாளராக பாண்டி உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. திருபுவனம் திருபுவனம் ஒன்றிய மாநாடு கீழப் பூவந்தியில் நடைபெற்றது. .இம்மாநாட்டில் தலைவராக சின்ன கருப்பன், செயலாள ராக ரவி, பொருளாளராக பூவந்தி ஊராட்சி மன்ற துணைத்தலைர் மகாலிங்கம், துணைத் தலைவர்களாக பெரியகருப்பன், சுமதி துணைச் செயலாளராக கல்லானை, தாண்டி, பிரியா ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். முன்னதாக மாநாட்டை மாவட்டத் தலை வர் பொன்னுச்சாமி துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவ கங்கை மாவட்டச் செயலாளர் தண்டியப் பன், ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், திருப்புவனம் தாலுகா இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் செல்லாததால் கடந்த 20 ஆண்டு காலமாக வறண்டு உள்ளது. இந்தக் கண் மாய்க்கு தண்ணீர் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐந்து நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்
இராமேஸ்வரம், நவ.14- தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக 46 முதல் 60 கிலோ மீட்டர் வரையில் காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்புக் கருதி கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல திங்கட்கிழமை மீன்வளத் துறையினர் அனுமதி அளித்தனர். இத னைத் தொடர்ந்து, இராமேஸ்வரம், பாம் பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்க ளில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சிறுவர்களுக்குத் தடை இராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது இரண்டு விசைப்படகுகள் மற்றும் 15 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்த னர். இதில், ஒரு மீனவர் சிறுவனாக இருப்ப தால் அவனை தவீர்த்து விட்டு மற்ற 14 பேர் மீது மட்டுமே இலங்கை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சிறார் களை மீன்பிடித் தொழிலில் ஈடுபட வைக்க வேண்டாம் என இலங்கை அதிகாரிகள் இந்திய அரசு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அதி காரிகளிடம் அனுமதி டோக்கன் வாங்கச் சென்றபோது மீன்வளத்துறை அதிகாரி கள் படகில் மீன்பிடிக்க செல்பவர்களின் விபரத்தை அளித்தால் மட்டுமே மீன்பிடிக் கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்க முடி யும் எனத் தெரிவித்தனர். இதனால் மீன வர்கள் வாக்குவாதம் செய்தனர். இதன் பின்னர் மீனவ சங்கத்தலைவர்கள் வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் சிறுவர்களை மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதன் பின்னர் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதிச் சீட்டு அளித்தனர்.