மதுரை, ஏப்.13- தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகாக் குழு சார்பில் மேலூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கும் நிகழ்ச்சி யில் தாலுகாச் செயலாளர் எம். கண்ணன், தாலுகா குழு உறுப்பி னர்கள் வி.அடக்கிவீரணன், எஸ்.பி.மணவாளன், ஆர்.சாகுல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.