ஒன்றிய அரசால் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் இடம் பெற்ற ஊர்தி நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வியாழனன்று வந்தது. இந்தஅலங்கார ஊர்திக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.