தேனி, மே 30- பெரியகுளம் சார் ஆட்சியராக ரிஷப் கடந்த 7.7.2021 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார் .பெரிய குளம் கோட்டத்தில் உள்ள 11 வரு வாய் கிராமங்களில் 216 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா வழங்கப் பட்டதைக் கண்டறிந்து அதை மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந் துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பெரியகுளம் வட்டத்தில் உள்ள வட வீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. ஒன்றியச் செய லாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் உறவினர்கள், தாமரைக் குளத்தில் 60 ஏக்கர் அரசு நிலம் அதி முக ஒன்றியச் செயலாளர் செல்ல முத்துவின் சகோதரர் மற்றும் உறவி னர்கள் கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அரசு அதிகாரி களின் உறவினர்கள் பெயரில் அ - பதிவேடை திருத்தி பட்டா வழங்கி யுள்ளனர் . இவற்றை பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் கண்டறிந்து மாவட் டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பெரிய குளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணி யாற்றிய ஜெயப்பிரித்தா, ஆனந்தி, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீர நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலு வலர் சுரேஷ், நில அளவையரின் உத வியாளர் அழகர், மண்டல துணை வட்டாட்சியரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபக ரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல் பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உட்பட பலர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர்.
கனிமவளக் கொள்ளை
வடவீரநாயக்கன்பட்டியில் அப கரிக்கப்பட்ட நிலத்தில் பல கோடி மதிப்பில் கனிமவளக் கொள்ளையை கண்டறிந்த சார் ஆட்சியர் ரிஷப், மேல் நடவடிக்கை எடுத்தார். இது தொடர் பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய தேனி கனிமவள மற்றும் புவியியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் களான ரமேஷ் (62) கோவிந்தராஜ் (63) சாம்பசிவம் (62) செல்வசேகர் (54) சசிகுமார் (44) மற்றும் வரு வாய் துறையைச் சேர்ந்த வட்டாட்சி யர்களான கிருஷ்ணகுமார் (48) ரத்தி னமாலா (42) துணை வட்டாட்சி யர்கள் மோகன்ராம் (42) சஞ்சீவ் காந்தி (46) நிலஅளவையர் பிச்சை மணி (37) வடவீரநாயக்கன்பட்டி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் (39) மற்றும் அதிமுக மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் ஆகியோர் மீது 9 பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து பணியாற்ற வேண்டும்
அரசுக்குச் சொந்தமான ரூ 200 கோடி பெறும் அரசு நிலத்தை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தும், பல கோடி மதிப்பிலான கனிமவளக் கொள்ளையை கண்டறிந்து திறம்பட செயல்பட்டார் ரிஷப். மஞ்சளாறு பகு தியில் நீர் வழிப் புறம்போக்கு நிலம் சுமார் 150 ஏக்கர் வரை அந்தப் பகுதி யின் செல்வேந்தர் ஒருவர் ஆக்கிரமித் துள்ளது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் தற் போது ரிஷப் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்குகளில் துணை ஆட்சி யர்கள், கோட்டாட்சியர்கள், வட் டாட்சியர் என உயர் அதிகாரிகள், அர சியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ள தால் வழக்குகள் நீர்த்துப் போக வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து பணி யாற்றினால் வழக்கு விசாரணை களுக்கு உதவியாக இருக்கும் எனவே அரசு நிலம் முறைகேடு வழக்கு மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்படும் வரை பெரியகுளத்தில் ரிஷப் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.