districts

img

ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.11- 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்காமல் உள்ள சம்பள  பாக்கியை தாமத கட்டணம் 0.05 சதவீதம் சேர்த்து உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்  பில் மதுரை புறநகர் பகுதிகளில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது.  அலங்காநல்லூரில் மாவட்டத் தலைவர் கே.தவமணி தலைமையில் ஒன்றியச் செய லாளர் ஆறுமுகம் முன்னிலையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செய லாளர் பி.ஜீவா உட்பட 95 பேர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டியில் மாவட்டப் பொருளா ளர் சின்னகருப்பன் தலைமையில், ஒன்றி யத் தலைவர் நாகராஜ், செயலாளர் சின்ன சாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் பெ.ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.  சேடபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமர் பெரியசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.கல்லுப்பட்டியில் தலைவர் செல்வ குமார், செயலாளர் குட்டிராஜா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விதொச மாவட்டப் பொருளாளர் ஆறு முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சமை யன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.