மதுரை, ஜன.31- மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் அரசு காலிப் பணி யிடங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். காலிப்பணி யிடங்களுக்கு நியமனம் செய்யப் பட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சி யரகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.வீரமணி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செய லாளர் வி. முருகன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பி. ஜீவா விளக்கிப் பேசினார். மாநில துணைச்செயலாளர் எம். சொர்ண வேல், மாநகர் மாவட்டச் செயலா ளர் ஏ.பாலமுருகன், பொருளா ளர் வி.மாரியப்பன், மாவட்ட இணைச் செயலாளர்- மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், உதவி தலைவர்கள் ஏ. பாண்டி, பா. பழனியம்மாள், புற நகர் மாவட்ட பொருளாளர் கே. சின்னகருப்பன், வடக்கு 1 ஆம் பகுதி செயலாளர் எஸ். ராஜேந்தி ரன் ஆகியோர் பேசினர். கோரிக்கை மனு மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கப்பட்டது. பின்னர் மாநிலச் செயலாளர் ஜீவா கூறு கையில், ஆர்ப்பாட்டத்தை முடித்து முதல் மாடியில் கார்ந்திருந்தோம் .ஆனால் ஆட்சியர் எங்களை நேரில் சந்திக்காமல் சென்றுவிட்டார். பணிக்கான ஆணை குறித்து சட் டத்தில் இடம் இருந்தால் அதை செயல்படுத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறார். மாற்றுத்திற னாளிகளுக்கு உரிய இடஒதுக் கீட்டை செய்ய வேண்டும் என்று அர சணையாக வந்துள்ளது. அந்த துறை சார்பில் மாவட்ட ஆட்சி யர்களுக்கு மெயில் அனுப்பியுள்ள னர். மாற்றுத்திறனாளி மீது அக் கறை இல்லாத போக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருக்கிறது. புதிய பணி நியமன பட்டியலை உடனடி யாக ரத்து செய்து. புதிதாக பட்டி யல் தயார் செய்து மாற்றுத்திற னாளிகளுக்கு உரிய இட ஒதுக் கீட்டை வழங்க வேண்டும். இல்லை யெனில் மாநில அளவில் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் முறையிட்டு எங்களுடைய உரிமை யை நிலை நாட்டுவோம் என்று தெரி வித்தார்.