திண்டுக்கல், செப்.12 திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி னர். மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நிய மிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி கள் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டை கள் அனைத்தையும் அந்தியோதயா, அன்ன யோஜனா கார்டுகளாக மாற்ற வேண்டும். திண்டுக்கல், பழனி பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு போதுமான வசதிகள் செய்து தர வேண்டும். இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார், முத் துப்பாண்டி, சசிக்குமார், ஆறு முகவள்ளி, கருப்புசாமி, கந்தசாமி, கண்ணுச்சாமி, மணிகண்டன், பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண் டனர். முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தி லிருந்து ஊர்வலமாக முழக்கங் களை எழுப்பியவாறு ஆட்சியர் அலு வலகம் நோக்கிச் சென்றனர். அப்போது, காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தடுத்தனர். அப்போது, காவல்துறைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மாற்றுத்திறனாளி களின் அனைத்து கோரிக்கைகளை யும் 15 நாட்களுக்குள் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.