நாகர்கோவில், டிச. 15- குமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமாக சீர்குலைந்துபோன தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்பு சாலைகளை செப்பனிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகரில் உள்ள கிருஷ்ணன்கோவில் கிராமநிர்வாக அலுவலகம் முன்பும், சுவாமியார்மடம் சந்திப்பிலும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் கே. மோகன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், அகமது உசேன், என்.எஸ். கண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ். அந்தோணி, இராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், தோவாளை ஒன்றிய செயலாளர் மிக்கேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் சிவதாணு பிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இதுபோல் சுவாமியார்மடம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவட்டார் வட்டார செயலாளர் ஆர்.வில்சன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். செல்ல சுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், மாவட்ட குழு உறுப்பினர் ஆர். ரவி , தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் , டிஒய்எப்ஐ மாநில தலைவர் ரெஜீஷ் குமார் உள்ளிட்டோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.