districts

img

அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு மக்கள் பயன் பெற வேண்டும் - ஆட்சியர்

நாகர்கோவில், ஏப்.3- கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட, திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக, புகைப் படக்கண்காட்சி நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் மா. அரவிந்த், கூறியதாவது:  தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல் வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களான, கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து  அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கும் முதல் மற்றும் இரண் டாம் தவணையாக ரூ. 2000/- வீதம் ரூ. 4000/-வழங்கும் திட்டம், நியாவிலைக்கடைகள் வாயிலாக 14 வகையான மளிகை பொருட் கள் பொதுமக்களுக்கு விலை யில்லாமல் வழங்கும் திட்டம், ஆவின் பால் விலையினை ரூ.3  குறைத்து வழங்கும் திட்டம், மக ளிர்கள் மற்றும் திருநங்கை களுக்கு இலவச பேருந்து பய ணத்திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம், கொரோனா நோயினால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுப வர்களுக்கு முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத் தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக் கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங் களை தெரிந்துகொண்டு அனைத் துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் என அவர் கூறினார்.