districts

img

சின்னமனூர் விபத்தில் பொறியாளர் பலி அமரர் ஊர்தியுடன் மக்கள் சாலை மறியல்

தேனி, பிப்.22- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கேயன் கோட்டையைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (32). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பரான ரஞ்சித்குமார் (34) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்கேயன்கோட்டையில் இருந்து சின்னமனூர் நோக்கி இரு  சக்கர வாகனத்தில் வந்து கொண் டிருந்தார்.‌ சிவகாமியம்மன் கோவில் அருகே உள்ள நான்கு ரோடு சந்திப்பான திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் நோக்கி வந்து கொண் டிருந்த அடையாளம் தெரியாத  வாகனம் மோதி விபத்துக்குள்ளா னது.  இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி ரிழந்தார்.‌ ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்‌.  உயிரிழந்த ரஞ்சித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப் பட்டு திங்களன்று அவரது ஊரில் அடக்கம் செய்வதற்காக அமரர் ஊர்தியில் எடுத்து வரப்பட்டது.  அப்போது அடிக்கடி விபத்து ஏற்படும் தேசிய நெடுஞ்சாலை யில் மேம்பாலம் அமைத்த பிறகு அந்தச் சாலையை பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறி இறந்தவரின் உற வினர்கள் சின்னமனூர் ரவுண்டானா சந்திப்பில் அமரர் ஊர்தியுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.