districts

மதுரை முக்கிய செய்திகள்

பிப்.19 முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

தேனி, ஜன.17 போடியில் இருந்து மதுரை, சென்னை செல்ல பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இரண்டு ரயில்கள் நீட்டித்து இயக்கப்பட உள்ளன. மதுரை-போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடி வடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் தேனி-போடி இடையேயான 15 கிமீ  பணிகள் முடிந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி அதிவேக  சோதனை ரயில் ஓட்டமும் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ள தாக ஆய்வுக்குழு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இருமார்க்கமாக மதுரையில் இருந்து தேனி வரை இயங்கும் ரயிலையும் (06701, 06702), சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயங்கும் அதிவேக விரைவு ரயிலையும் (20601,20602) பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் போடி வரை நீட்டித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்  படும் சிறப்பு ரயில் மதுரையில் காலை 8.20 மணிக்கு கிளம்பி வடகவுஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தேனி வழியே போடிக்கு 10.30 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கமாக மாலை 5.50மணிக்கு போடியில் இருந்து கிளம்பி மதுரைக்கு 7.50மணிக்கு சென்றடைகிறது. இதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அதிவேக விரைவு ரயில் காலை 7.15மணிக்கு கிளம்பி 9.35 மணிக்கு போடி வந்தடைகிறது. மறுமார்க்கமாக இரவு 8.30 மணிக்கு கிளம்பி 10.45 மணிக்கு மதுரை சென்ற டைகிறது. பின்பு அங்கிருந்து இந்த ரயில் சென்னை செல்கிறது. ஏறத்தாழ 12ஆண்டுகளுக்குப்பிறகு போடிக்கு ரயில்  சேவை கிடைத்துள்ளதுடன், சென்னைக்கு நேரடி ரயிலும்  இயக்கப்பட உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி யில் உள்ளனர்.

மாநில கோகோ போட்டி காளையார்கோவில் மாணவ, மாணவிகள் தங்கம் வென்றனர் 

சிவகங்கை, ஜன.14- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் போலீஸ்  பள்ளி மாணவிகள் கோகோ போட்டியில் மாநில அள வில் வென்றனர்.  பாரதியார் தினத்தை முன்னிட்டு  19 வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவிக்களுக்கான மாநில அளவி லான கோகோ போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடை பெறறது. இப் போட்டியில் காளையார்கோவில் ஹோலிஸ்பிரிட் பள்ளி மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர்.  17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு குடியரசுதின கோகோ போட்டி தர்ம புரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் காளை யார்கோவில் ஹோலிஸ்பிரிட் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் வருவாய்த்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அருப்புக்கோட்டை, ஜன.17- அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கூடுதல்  கட்டிடம் கட்டும் பணியினை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்  தொடங்கி வைத்தார். மேலும் இதில்,  நகராட்சி ஆணையாளர் ஜி.அசோக்  குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய சேர்மன்ற சுப்பாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில், நகர்மன்ற உறுப்பி னர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

வடமாநிலத் தொழிலாளி  மர்ம மரணம்

 திருச்சுழி, ஜன.17- திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம் தனியார் பஞ்  சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளி திடீரென மரணம் அடைந்தது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே  மேலகண்ட மங்கலத்தில்  தனியார் பஞ்சாலை உள்ளது. அதில்,  ஒடிசா  மாநிலத்தைச்சேர்ந்த சஞ்சீப் முண்டா(20) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள  தங்கும் விடுதியில்  நண்பர்களுடன்  அளவுக்கு அதிகமாக மது அருந்தியதா கக் கூறப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் காலை, அவர் எழவில்லையாம். எனவே, சஞ்சீப் முண்டாவை, அருப்புக்  கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து  பிரசாந்த் நாயக் (25) என்பவர்  திருச்சுழி  காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்

விருதுநகர், ஜன.17- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்  கம் அளிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் கேள்விகளுக்கு அபுதாபி யில் உள்ள அமெரிக்க நிறுவனமான சேவியான் டெக்னா லஜியின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதேவி ஆன் லைன் மூலம் விளக்கம் அளித்து உரையாற்றினார். பள்ளியின் உதவி செயலர் காசி கோபிநாத், தலை வர் ஜெயவேல் பாண்டியன், உப தலைவர் அஜய்,  பள்ளி தலைமை ஆசிரியை தங்க ரதி ஆகியோர் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதேவிக்கு நன்றியை தெரி வித்தனர். இதில் 200 மாணவிகள் கலந்துகொண்டனர்.

மதுபானம் விற்றவர்கள் கைது

திருவில்லிபுத்தூர் ஜனவரி 17  திருவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர்கள் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டனர் நத்தம்பட்டி வலை யன்குளம்பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ரெங்கபாளையத்தை சேர்ந்த லட்ச பிரபு நத்தம் பட்டியை சேர்ந்த பாண்டி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 149 மது பாட்டில்களையும் பறி முதல் செய்தனர். 

தேனி வழியாக கஞ்சா கடத்தல் 1200 கிலோ பறிமுதல்: 3 பேர் கைது

தேனி, ஜன.17- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ எடையுள்ள கஞ்சா வை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இராமநாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக தென் மண்டல ஐ.ஜி., தனிப் பிரிவு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்  சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டது.  இந்த நிலையில், ஆண்டிபட்டி காவல் சோதனைச் சாவடியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற லாரி ஒன்றை போலீசார்  தடுத்து  நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கரு வாட்டுக் கூடைகளுக்கு இடையே தலா 40 கிலோ எடையுள்ள பொட்டலங்களாக, மொத்தம் 1,200 கிலோ கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்த லுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை ஆண்டி பட்டி காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இராம நாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், அய் யன்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது மகன் அபுபக்கர்சித்திக் (35), இளவனூர் அருகே சிலிப்பியைச் சேர்ந்த சிங்கத்துரை மகன் செல்வராஜ் (32), கார்த்திகைசாமி மகன் சின்னச்சாமி (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம், காக்கி நாடா பகுதியிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், இதை திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது என்று தனிப் பிரிவு போலீ சார் கூறினர். கைது செய்யப்பட்ட 3 பேரும் உத்தம பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு, நீதிமன்றக் காவலில் தேக்கம்  பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியில்  சுற்றுலாப் பயணிகளிடம் அத்துமீறும் போதைக்கும்பல்

மதுரை, ஜன.17- மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தமிழக மக்களும் பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் வருகின்றனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் வெளி மாநிலத்தில் இருந்து வந்த வர்கள் இரவில் நியூ சினிமா தியேட்டர் அருகே கடை வாசலில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தகர்.அப்போது   சில  இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதை யில் அங்கிருந்த பெண்களிடம் அத்துமீறி னர். இவர்களுடன் வந்த ஆண்கள் கண்  டித்து எதிர்ப்பு தெரிவிக்கவே,  போதைக் கும்பல் தப்பிஓடியது. பின்னர் அக்கும்பல் சில ரவுடிகளை அழைத்து வந்து வெளி மாநிலத்தவர்களை தாக்கினர்.இதில்  இவர்களின் சத்தம் கேட்டு காவல்துறை யினர் வரவே,  ரவுடிகள் தப்பிச் சென்ற னர்.  ரவுடிகளின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி காவல் துறையினர் காவல்நிலை யத்திற்கு எடுத்துச் சென்றனர்.  இது குறித்து அப்பகுதியில்   கடை  நடத்துபவர்கள்  மற்றும் குடியிருப்புவாசி கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இருக்  கும் சில இளைஞர்கள் இங்கு சாலையோ ரங்களில் கடை போட்டுள்ளனர்.  அவர்கள் சுப்பிரமணியபுரம், திடீர் நகர் போன்ற பகுதி களில் உள்ள அவர்களுடைய நண்பர்களு டன் பழக்கம் வைத்து கஞ்சா, மது, போதை  மாத்திரை போன்ற போதை பொருட்க ளுக்கு அடிமையாகியுள்ளனர். போதைப் பழக்கம் உள்ள நபர்களை  இப்பகுதிக்கு அழைத்து வருகிறார்கள்.  அவர்கள் இரவு முழுவதும் இப்பகுதி யில் கடைகள் முன் அமர்ந்து கஞ்சா  அடிப்பது, மது அருந்துவது, பெண்களை  கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடு பட்டு வருகிறார்கள். நாங்கள் காவல்துறை யிடம் சொல்லவும் பயமாக இருக்கின்றது. சொன்னால் ஆட்களை கூட்டி வந்து மிரட்டு கிறார்கள். இங்குள்ள கடைக்காரர்களை யும் மிரட்டுவது, காசு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறையினர் இப்பகுதிகளில் ரோந்துப் பணியினை தொடர்ந்து நடத்திட வேண்டும். இல்லையென்றால் பொது மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. கஞ்சா மற்றும் இரவு நேரங்களில் மது  விற்பனை நடக்கிறது. இதைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி னர்.                         (ந.நி)