விருதுநகர், அக்.7- வத்திராயிருப்பில் உள்ள முத்தாலம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு தமிழ கத்தின் மதநல்லிணக்கத்தி ற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக திகழ்ந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் முத்தா லம்மன் கோவில் உள்ளது. இத்திருவிழா மிகவும் பிர சித்தி பெற்றதாகும். திரு விழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டத் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்தநிலையில், முத்தா லம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவிற்கு பக்த சபா செயலாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தலை வர் சுந்தர்ராஜ் பெருமாள் முன்னிலை வகித்தார். பாதிரி யார் அந்தோணிசாமி குத்து விளக்கை ஏற்றி வைத்து கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். பின்பு, விழா விற்கு வந்திருந்து அனை வரும் மதநல்லிணக்க ஒரு மைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்பு நிகழ்ச்சிகள் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தற்போதைய சூழ்நிலையில் மதநல்லி ணக்கம் இல்லாமல் உள்ளது.
மதச் சச்சரவுகளும் முக்கிய பிரச்சனைகளாக மாறியுள்ளது. இந்த சூழ் நிலையில், வத்திராயிருப் பில் சாதி, மதங்களை கடந்து, மத நல்லிணக்கத்துடன் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து இந்த விழா வை கொண்டாடுவது நமது நாட்டிற்கே சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்த விழா வைப் போல நாடு முழுவ தும் உள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் மத நல்லி ணக்கத்துடன் திருவிழாக் களை அனைவரும் கொண் டாடுவது அவசியமாகும். அனைத்துத்தரப்பு மக்க ளும் ஒற்றுமையாக நல்லி ணக்கத்துடன் இருந்து விட்டால், காவல் நிலையங்க ளும், நீதிமன்றங்களும் தேவையே இல்லை என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாதிரியார் அந்தோணிசாமி கூறுகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும் இறைவன் ஒருவனே. அனைத்து மதங்களும் பிறரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றன. எனவே, நாம் அனைவரு மே அன்பிற்கு கட்டுப்பட்ட வர்கள்தான். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக அனைவ ரும் இருக்க வேண்டும். நம்மை ஒருமைப்படுத்துவ தற்கும், கட்டுக்குள் வைப்ப தற்கும்தான் மதங்கள் உள்ளன என தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் பக்த சபா உறுப்பினர் கூடலிங்கம் நன்றி கூறினார். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.