விருதுநகர், ஜன.5- விருதுநகரில் குடிப்ப தற்கு உப்பு சுவை மிகுந்த தண்ணீரை வழங்குவதைக் கண்டித்து நகராட்சி அலு வலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் நகராட்சி யில் 36 வார்டுகள் உள்ளன. இதில் நகரின் கிழக்குப் பகு தியில் உள்ள சில வார்டு களுக்கு மட்டுமே தாமிர பரணி குடிநீர் வழங்கப்படு கிறது. அதேவேளை, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான வார்டு களுக்கு ஆணைக்குட்டம் தடுப்பணை மற்றும் அங் குள்ள 14 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந் தது. இந்தநிலையில், ஆணைக்குட்டம் தடுப் பணை மற்றும் கிணறுகளில் உள்ள தண்ணீர் முழுவதும் என்ன காரணத்தினாலோ உப்பு சுவையுள்ளதாக மாறி யுள்ளது. இந்த தண்ணீர் குடிப் பதற்கு உகந்ததாக இல்லை. இதை பெரும்பாலான வார்டு பகுதிகளுக்கு நக ராட்சி பொறியியல் துறை விநியோகம் செய்து வரு கிறது.
இதனால், பொது மக்க ளுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வரு கின்றன. இதனால், ஆவேசம டைந்த பாத்திமாநகர், காளி யம்மன் கோவில் தெரு, கிருஷ்ணமாச்சாரி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த நகராட்சி பொறியா ளர் மணி மற்றும் காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். முடிவில், ஆணைக்குட் டம் தடுப்பணை மற்றும் கிணறுகளில் இருந்து தண் ணீர் எடுப்பது நிறுத்தி வைக் கப்படும் எனவும், அதற்கு பதிலாக ஆணைக்குட்டம் கோடை கால நீர்த்தேக்கம், காரிசேரி மற்றும் ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் பகுதி யில் உள்ள குடிநீரை விநியோ கம் செய்வது எனவும், புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பணியை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து நகரின் மேற்கு பகுதியில் கூடு தலான தாமிரபரணி குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட் டது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஎம் நகர் செயலாளர் எல்.முரு கன், நகர்மன்ற உறுப்பினர் கள் ஜெயக்குமார், மஞ்சுளா, பால்பாண்டி, சிபிஎம் கிளைச் செயலாளர் பி.ராஜா, நகர்க் குழு உறுப்பினர் ஐ.ஜெயா, பி.ஸ்டாலின் ஆகியோர் உட் பட பலர் பங்கேற்றனர்.