ஒட்டன்சத்திரம், ஆக.14- ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் உள்ள காந்திநகர், சாஸ்தாநகர், திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல்- பழனி ரயில்வே சாலையைக் கடந்து செல்லவேண்டும். ரயில்கள் வரும்போது கேட் பூட்டப்படும்போது காலை நேரங்களில் பள்ளி உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் பல நிமிடங்கள் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை யின்போது ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனங் கள் கூட அந்த வழியாக செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வா கம் தலையிட்டு சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரை வெளியேற்றவேண்டும். எதிர்காலத் தில் இதுபோல தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.