districts

img

மதுரை தமுஎகச சார்பில் மக்கள் விழா

மதுரை, ஜன. 27-   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுரை பயாஸ் கோப் கிளை சார்பில் வியாழ னன்று கிளை துணைச் செயலாளர் ஆர். சசிகுமார் தலைமையில் மக்கள் விழா, முத்துராமலிங்கபுரம் பகுதியில்  நடைபெற்றது. இதில் இசைநிகழ்ச்சி, கவியரங்கம், சிறார்களுக் கான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட செயலாளர் ஸ்ரீ ரசா, திரைக் கலைஞர் காளை ஆகியோர்  வாழ்த்திப்பேசினர். சமூக ஆர்வலர்கள் ஜெரால்டு, முத்துகிருஷ்ணன், மூத்த தோழர் வி. கே, பழனி மற்றும் பைக்காரா பகுதி சிலம்ப பயிற்சியாளர் வாலி பர் சங்க பழங்காநத்தம்  பகு திக்குழு தலைவர் யமுனா சரவணன் 56 முறை ரத்த தானம் செய்வதற்காக மற்றும் மாவட்ட மாநில அள வில் பரிசுகள் பெற்ற சிலம்ப  பயிற்சி பள்ளி மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது தமுஎகச மாநிலத் தலை வர் கவிஞர் மதுக்கூர் ராம லிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடை பெற்றது. சுதாகர் ஜெயரா மன், பேராசிரியை இந்தி ராணி,இயக்குனர் வைர பிரபு.எழுத்தாளர் இளங்கோ வன் கார்மேகம், கவிஞர் பாண்டிச்செல்வி, எஸ். எம். நவாஸ் ஆகியோர்  பேசினர்.