districts

img

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திடுக! சாலை, தெரு விளக்குகளை சீரமைத்திடுக!

மதுரை, நவ.2- ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சாலை,தெரு விளக்குகளை சீரமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மதுரை நகர சபை கூட்டங்களில் மக்கள் முன் வைத்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்க ளின் கோரிக் கைகள் கேட்டறியும் நகர சபைக் கூட்டம் நவம்பர் 1 ஆம் தேதி செவ்  வாயன்று பல்வேறு பகுதிகளில் நடை பெற்றது. மண்டலம் - 3 , 57 ஆவது வார்டு  ஆரப்பாளையம் மந்தை பகுதியிலும் 76 ஆவது வார்டு திடீர் நகர் சமுதாய கூடத்திலும் மேயர் வ.இந்திராணி தலைமை யில் நகரசபை நடைபெற்றது இதில் மண்ட லத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொது மக்களிடம் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.  

துணை மேயர் தி.நாகராஜன் தலைமை யில் 80 ஆவது வார்டு சமுதாயக்கூடத்தில் நகரசபை நடைபெற்றது. வார்டு பொது மக்கள் கூறுகையில், பாதாளச் சாக்கடை கழிவுநீர் தெருப் பகுதியில் தேங்குவதை தடுக்க வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். ஆரம்பசுகாதார மையம் அமைக்க வேண்டும். சுந்தர்ராஜ புரம் மருத்துவமனையில் மகப்பேறு தாய்மார் கள் அதிக அளவில் சிகிச்சைக்கு  வருகின்றனர்.சுந்தர்ராஜபுரம் மாநக ராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் இயந் திரத்தை புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும். தெருப்பகுதிகளில் உள்ள சாலைகளை சீர மைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநகராட்சி உதவி செயற்பொறியா ளர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  23 ஆவது வார்டு செல்லூர் 60 அடி சாலை யில் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலை மையில் நகரசபை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பேசுகையில்,பாதாளச் சாக்கடையை தூர்வாருவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை  மூடிகள் உடைந்துள்ளன. அதை உடனடி யாக மாற்ற வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், பாக்கி யநாதபுரம் தெரு பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக் கைகளை முன்வைத்னர். மண்டலம் 2 உதவி பொறியாளர் மரகதவல்லி மற்றும் வார்டு இளநிலை பொறியாளர் கதிர்வேல் ஆகி யோர் கலந்து கொண்டனர்.