districts

img

அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் போராட்டம்

அருப்புக்கோட்டை, ஆக.12- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி   அனைத்துத்துறை ஓய்வூதியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.   அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கல்யாணி தலைமையேற்றார். துவக்கி வைத்து  இணைச்செயலாளர்  ரவிசங்கர் பேசினார். போராட்டத்தை ஆதரித்து பி.எஸ்.என்.எல். சங்கத்தின் சார்பில் சந்திரசேகர், சிவகாமி ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் திருவண்ணாமலை கண்டன உரையாற்றினார். மேலும் இதில், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.காத்த முத்து, எஸ். தமிழ்செல்வராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூர்  திருவில்லிபுத்தூரில் நகராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத்  தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார் . மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கிப் அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலா ளர் கருப்பையா மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள் பூங்கொடி, இராம.ஸ்ரீனிவாசன்,   வீர சதானந்தம் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.