districts

img

தேனியில் ஓய்வூதியர் தினம்

தேனி, டிச.17- அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனியில் ஓய்வூதி யர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தேனி போக்குவரத்துக்கழக ஓய்வூதி யர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலை வர் சி.பா.ஆண்டவர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கே.ராஜாமணி வர வேற்று பேசினார் .அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் கே.துரை ராஜ், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க  மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார். மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே.சந்திரசேகர் ,போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல துணைப் பொதுச்  செயலாளர் எம்.பாலையா, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பி.முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .ஓய்வு பெட்ரா பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.பொன் னையா நிறைவு செய்து பேசினார். முத்து ராமன் நன்றி கூறினார்.