districts

img

ஊரக வளர்ச்சி -ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட மாநாடு

மதுரை, ஜூலை 9-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூ தியர்கள் சங்க மதுரை மாவட்ட முதலா வது மாநாடு சனிக்கிழமையன்று மாவட்டத் தலைவர் பா.தினகரசாமி தலைமையில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் எம். ஜெயசீலன் வரவேற்றுப்  பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்  துறை ஓய்வூதியர் சங்க மாநில பொரு ளாளர் என். ஜெயச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட  செயலாளர் அ.சோலைமலை வேலை  அறிக்கையும், மாவட்ட பெருளாளர் இரா.பரமசிவன் நிதிநிலை அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். சொக்கலிங்கம் ,முன்  னாள் மாநிலத் தலைவர் எம். சுப்பிர மணியன், மாநில கெளரவத் தலைவர் எம். பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்ட பெருளாளர் இரா.பரமசிவன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்  பட்டனர். தலைவராக முத்துராம லிங்கம், செயலாளராக ஜெயராமன், பொருளாளராக பரமசிவன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகிகள், 2 மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண் டும். ஓய்வூதியச்சட்டம் 1978 - ல் திருத்  தம் செய்து ஓய்வூதியர்கள் 70 வயதை நிறைவடையும் போது 15 சதவீத கூடு தல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை எய்தும் ஓய்வூதியர்களுக்கு ரூ .50 ஆயிரத்திற்கு பதிலாக அரசுப்  பணியில் இருப்பவர்களுக்கு வழங்கு வதைப்போல் ரூ .3 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்காக மருத்துவக்காப்பீடு திட்டத்தில் கட்ட ணமில்லா சிகிச்சை என்ற அடிப்படை யில் மருத்துவ பரிசோதனைக்கான செலவு, மருந்துகளுக்கான செலவு  மற்றும் தொடர் மருத்துவ செலவுகளுக் கான முழுத்தொகையும் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.