ஓய்வூதியர் சங்க மாநாடு
சின்னாளப்பட்டி, மே 28- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 4-வது வட்டக்கிளை மாநாடு வட்டார தலைவர் அமாவாசை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கேசவன் ,மாவட்ட துணைத்தலை வர் ஜெயமணி, மின்சாரத்துறை முருகேசன், போக்கு வரத்துத்துறை கணேசன், கல்வித்துறை மணிவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட தலைவர் ஜெய சீலன் சிறப்புரையாற்றினார். அரசு மருத்துவமனையில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் நிலக்கோட்டை வட்டாரத்தில் அரசு ஐடிஐ பாலிடெக்னிக் தொழிற்பயிற்சிகூடம் ஏற்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலை வராக அமாவாசை, செயலாளராக பிச்சையம்மாள், பொரு ளாளராக ஜெயபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, மே 28- அரசு போக்குவரத்துகழக ஓய்வுபெற்றோர களுக்கு 77 மாதங்களாக அகவிலைப்படி மற்றும் பணிஓய்வு பணப்பயன்கள் வழங்காததை கண் டித்தும் பழைய ஓய்வூதியத்திட்டம் ,மருத்துவக்காப் பீட்டு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் மத்திய,மாநில அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் காரைக்குடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அமைப்புகளின் நிர்வாகி கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சிபிஎம் பழனி நகர -ஒன்றிய அலுவலகங்கள் திறப்பு விழா
திண்டுக்கல், மே 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி நகர் மற்றும் ஒன்றியக்குழு அலு வலகங்களின் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெறுகிறது. மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பழனி படிப்பாறை காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு கட்சி யின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன் தலைமை வகிக்கிறார். நகரச்செயலாளரும், பழனி நகர்மன்றத் துணைதலைவருமான கே.கந்தசாமி வரவேற்புரையாற்று கிறார். மாநில செயற்குழு உறுப்பினர்கள மதுக்கூர் இராமலிங்கம், கே.பால பாரதி, மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாநிலக்குழு உறுப்பினரும் தீக்க திர் முதன்மை பொதுமேலாளருமான என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
கோரிக்கையை ஏற்கவில்லையெனில் மே 30 இல் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
மதுரை, மே 28- 7 வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக பணியாளர்கள் நிரந்தபபடுத்த பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மே - 30 ஆம் தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக மதுரை மாநகராட்சிக்கு 100 வார்டுகளில் பணி புரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மாநகராட்சி ஆணையரி டம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங் கப்பட்டது, இதனையடுத்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை அன்று மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்றது இதில் மேயர் இந்திராணி, துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ். சந்தியாகு, மதுரை மாநகராட்சி தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் எம். பாலசுப்பிரமணியம், தலைவர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகிகள் கருப்பசாமி, சீதா லெட்சுமி, சிஐடியு மற்றும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் பொதுச் செயலாளர் எஸ். பூமிநாதன், மாநில துணை பொதுச் செயலாளர் முத்து, தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் எம். அம்ச ராஜ், தலைவர் பட்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் களின் 28 கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. நாளைக்குள் கோரிக்கையை ஏற்று ஒரு நல்ல தீர்வு எட்டப்பட வில்லையெனில் தொழிற்சங்கங்கள் அறிவித்து போல் மே 30ஆம் தேதி மாநகராட்சி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தனர். தற்போது வரை நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணகி கோயிலுக்கு மலைச்சாலை: வருவாய், வனத்துறையினர் ஆய்வு
தேனி, மே.28- தமிழக-கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோயில் தற்போது சிதிலமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இக்கோயிலுக்கு கேரள மாநிலம் குமுளி வழி யாக ஜீப்பில் செல்ல பாதை உள்ளது. தமிழக வனப் பகுதி வழியாக செல்ல பளியங்குடி அடிவாரத்தில் இருந்து நடைபாதை உள்ளது. இந்த பாதையில் வாக னங்கள் செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என தமிழக பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்காக ரூ.1 கோடி ஒதுக்கினார். இதனை தொடர்ந்து தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க சர்வே பணிகள் தொடங்கியது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், தேனி மாவட்ட வனஅலு வலர் வித்யா, வனச்சரகர் அருண்குமார், உத்தம பாளையம் தாலுகா நில அளவையர்கள் கார்த்திக், சுரேஷ், கூடலூர் தெற்கு நிர்வாக அலுவலர் தெய்வேந் திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.