கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 96வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயா பேசு கையில், மறைந்த திரையிசைப் பாடகர் பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தர ராஜன் உருவச் சிலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் பொருத்தமான இடத்தை தேர்வு செய்த மாநகராட்சிக்கும் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு சிலை வேண்டுமென்று பல்வேறு மாநாடு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானங்கள் கொண்டு வந்தது. சட்டமன்றத்திலும் வலியுறுத்தியது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் பேசினர். அதே போல் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்க ளும் இதற்கு கூடுதல் முயற்சி எடுத்த தற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாநகராட்சி பணியில் ஊழியர் கள் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு கொண்டுவந்த அரசாணை எண் 152ஐ வாபஸ் வாங்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டுள்ளதா?
மதுரை மாநகராட்சி புதிய ஊழி யர்கள் நியமிக்கப்படுவதற்கான திட்டங்கள் உள்ளதா? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்டு மீதமுள்ள சேமிப்பு பணம் மாநகராட்சிக்கு வழங்கப் பட்டுள்ளதா? மதுரை மாநகராட்சியில் பள்ளி கள் தரத்தை உயர்த்த வேண்டி உள்ளது கடந்த ஆண்டுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளிகள் கூட இந்த ஆண்டு 60, 70 சதவீதம் என்று தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மாநகராட்சி பள்ளி களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக 56வது வார்டு வெள்ளி வீதியார் பள்ளி, சேதுபதி பாண்டித் துரை பள்ளிகளில் பராமரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப் பட்ட வணிக வளாக கடைகள் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை. கடை களை உரியவர்களுக்கு கொடுப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எத்தனை கிலோமீட்டர் சாலைகள் அமைப்ப தற்கான திட்டங்கள் ஏற்பாடு உள்ளது? இந்த சாலைகள் அமைத்து பாதாள சாக்கடை பைப் லைன் குழாய் அமைப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரை முழுவதும் வேலை நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுவதும் மிகவும் மந்தமான முறையில் நடை பெற்று வருகிறது. வேலை நடை பெறும் இடங்களில் அதிகாரிகள் பெரும்பாலான நேரங்களில் இல்லாத நிலை உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று பேசினார்.