மதுரை, ஏப். 30- மதுரை சித்திரை திரு விழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது. சித்திரை திருவிழா எட் டாம் நாள் நிகழ்வாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் - 30 ஞாயிறன்று நடை பெற்றது மீனாட்சி அம்மன் சந்நிதி ஆறு கால் பீடத்தில் இரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கி ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மீனாட்சியம்மன் நான்கு மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.