districts

img

தூத்துக்குடியில் தடுப்பூசி சிறப்பு முகாம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, ஏப்.30- தூத்துக்குடியில் 28-ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் அரசு செவிலியர் கல்லூரி யில் நடைபெற்றது. முகா மினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் சனிக்கிழ மையன்று தொடங்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  அப்போது அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்த தாவது:  தூத்துக்குடி மாவட்டத் தில் 28-ஆவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 763 மையங்களில் நடைபெறு கிறது. இதில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 713 இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி மையங்களில் மதியம் வரை தடுப்பூசி செலுத்தாதவர்க ளுக்கு, அப்பகுதி மையங்க ளில் உள்ள செவிலியர்கள் மூலம் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.  கிராம சபை மே 1 அன்று 403 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலர்கள், முன்னி லையில் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கிராம  வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாமில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, இணை இயக்குநர் (சுகாதார பணி கள்) எஸ்.பொற்செல்வன், கோட்டாட்சியர் சிவ சுப்பிர மணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திக்கேயன், இளங் கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.