districts

மதுரை முக்கிய செய்திகள்

அரசு பேருந்து மோதி சிபிஎம் கட்சி உறுப்பினர் - மனைவி பலி கட்சித் தலைவர்கள் அஞ்சலி

மதுரை, பிப்.23-  மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சேடப்பட்டி ஒன்றி யம் அணைக்கரை பட்டியைச் சேர்ந்தவர் சின்ன முனி யாண்டி (55). இவரது மனைவி மகாலட்சுமி (50). இவர்கள் பேரையூரில் நர்சரி கார்டன் வைத்துள்ளனர். இவர்கள் டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.  தேவன் குறிச்சி விலக்கு அருகே சென்றபோது எதிரே  வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மோதிய தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இருவரது உடலும் திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மரணம் அடைந்த முனியாண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேடப்பட்டி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி கிளை உறுப்பினர் ஆவார்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, த.செல்லகண்ணு டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.சமயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.ஏ.இளங்கோவன், வி.முருகன், சேடபட்டி ஒன்றியச் செய லாளர் காசிமாயன் ஆகியோர் அவர்களது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஏலச் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம்  மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

தேனி, பிப்.23-  ஆண்பட்டியில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி  செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்  பட்டது.  தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர், ஆண்டிபட்டியில் உத்தமபாளையம் அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வந்த ஏலச் சீட்டு நிறுவனத்தில் மாதாந்திர தவணத் தொகை  செலுத்தி வந்துள்ளார். தவணைகள் முடிந்த பின்பு சீட்டு முதிர்வுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மலைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கடந்த 2015  மார்ச் 3 அன்று மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் டேவிட்  புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தினர். இதில், மலைச்சாமி ஏலச் சீட்டு  நடத்தி டேவிட் உள்ளிட்ட 63 பேரிடம் மொத்தம் ரூ.50  லட்சத்து 40 ஆயிரத்து 430 மோசடி செய்தது தெரிய  வந்தது. இதையடுத்து மலைச்சாமியை காவல்துறை யினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி  மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கோபிநாதன், ஏலச் சீட்டு  நடத்தி பணம் மோசடி செய்த மலைச்சாமிக்கு 7 ஆண்டு கள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து  தீர்ப்பளித்தார்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை

மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தகவல்

மதுரை, பிப்.23-  சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரி லும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வச திக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற் கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்க ளில் தயாரிக்கப்படும் என்றும் இதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்யப் பட்ட பின்னரே திட்டமிட்டப்படி அறிக்கை தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ  ரயில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து சென்னை மெட்ரோ  ரயில் திட்ட இயக்குநர் மேலும் தெரிவிக்கை யில், மதுரை மாநகர் மக்களின் போக்கு வரத்து வசதிக்காக விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்  கையை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ  ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளி யிட்டுள்ளது. இதன் முதல் கட்டத் திட்டம் 18  ரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர்  நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. இது திருமங்கலத்தில் இருந்து  ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து  திட்டமாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித் துள்ள நிலையில் அதன் அடிப்படையில் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக  அரசு சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.  இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறு வனம் இறுதி செய்த பின்னர் இதற்கான அறிக்கையை தயாரிக்க முடியும். அவ் வாறு இறுதி செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனம் மூலம் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மேலும் ரயில் நிலைய வகை, செலவுகள், செயல்  படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொரு ளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும். எனவே இறுதியான விரிவான திட்ட  அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்த பின்னரே 75 நாட்க ளில் விரிவான திட்ட அறிக்கை தயா ரிக்கப்படும் என்று திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2 முதுகுளத்தூரில் சந்தை  வியாபாரிகள் கோரிக்கை தொடர்பான கூட்டம் 

இராமநாதபுரம், பிப்.23- சிஐடியு கமுதி வட்டார சந்தை வியாபாரிகள் கோரி க்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சி யர் தலைமையில் சமாதானக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. சந்தானம், சிஐடியு முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முத்து விஜயன் மற்றும் சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராமு, அண்ணாதுரை ,ஆலடீஸ்வரன் மற்றும் வட்டாட்சியர், காவல்துறை அதி காரிகள் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே மார்ச் 2ஆம் தேதி முதுகுளத்தூரில் கூட்டம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் கூட்டத்தில் பேரூராட்சி கள் உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இத்தகவலை முறை சாரா தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர் முத்து விஜயன் தெரி வித்துள்ளார் .இதனிடையே வியாழக்கிழமை நடை பெறும் முதுகுளத்தூர் வார சந்தையை வியாபாரிகள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

அருப்புக்கோட்டை, பிப்.23- அருப்புக்கோட்டை அருகே ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மதுரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 20 மூட்டைகளில் 800 கிலோ ரேசன் அரிசி  இருப்பது தெரியவந்தது. பின்பு, நடத்திய விசாரணையில்  வேனில் வந்தவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த  மணிகண்டன்(20), ராஜபாண்டி(28) என்பதும், இருவரும்  நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசியை சேகரித்து மதுரையில் உள்ள ஆலையில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மூடைகளை வாகனத்துடன் பறி முதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

ரேசன் அரிசி கடத்தியவர்  குண்டர் சட்டத்தில் கைது

தேனி, பிப்.23- லாரியில் ரேசன் அரிசி கடத்தியவரை குண்டர் தடுப்புச்  சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா உத்தரவிட்டார். தேனி மாவட்டம், குமுளி சாலை வழியாக கேர ளத்திற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்திச் சென்ற மதுரை, தெற்கு வெளி வீதியைச் சேர்ந்த சீனிவாசன்(54), ஆத்தி குளத்தைச் சேர்ந்த பாலசிங், கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாழையாறைச் சேர்ந்த ஜான்பாட்சா ஆகி யோரை கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.  இதில், சீனிவாசன் மீது ரேசன் அரிசி கடத்தல் தொடர்  பான பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால்,  மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வு பிரிவு கண்காணிப்பாளர் சினேகப்பிரியா பரிந்து ரையின் பேரில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொண்டர்கள் யார் பக்கம் என்பதை  மக்கள் தீர்மானிப்பார்கள்

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி, பிப்.23-  எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக  பொதுக்குழு செல்லும் என்றும் ஓ.பன்னீர்  செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவா ளர்களை நீக்கியதும் செல்லும் என்றும் கடந்த  2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உச்சநீதிமன்றம் உறுதி செய் தது.  உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர்.  இதுகுறித்து மதுரையில் செய்தியா ளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறுகை யில், இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பக்கம் என்று தெரிவித்தார்.  பெரியகுளம் தென்கரையில் உள்ள இல்லத்திலிருந்து சென்னைக்கு கிளம்பிய ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஒன்றை கோடி தொண்டர்கள் என்பக்கம் என இபிஎஸ் சொல்கிறாரே என்ற  கேள்விக்கு, தொண்டர்கள் யார் பக்கம் என்  பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.  நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட  நடவடிக்கை குறித்த கேள்விக்கு, இது குறித்து உரிய நல்ல ஒரு அறிக்கை விரைவில் வெளிவரும் என்று கூறினார்.

பட்டியலின மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற வழக்கு திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.க்கு  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

திண்டுக்கல், பிப்.23- தீண்டாமைக் கொடுமையால் சின்னாள பட்டியில் தனியார் பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி யில் உள்ள தேவாங்கர் பெண்கள் உயர்  நிலைப் பள்ளியில்  9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் 2 பேர் கடந்த பிப்ரவரி 15 புதன்கிழமையன்று பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய நிலையில் அம்மாணவிகள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த பின்னணியில் அப்பள்ளி ஆசிரியைகள், மாணவிகளிடம் தீண்டாமை கடைப்பிடித்ததாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக தொப்பம்பட்டி கிராம மக்கள் சின்னாளபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் கோட்  டாட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியை கள். மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.  அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை விநாயகஜெயந்தி, கணித ஆசிரியை பிரேம லதா, உடற்கல்வி ஆசிரியை ரம்யா, மற்றும் ஆசிரியைகள் கலைச்செல்வி, சாந்தா ஆகிய 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு ஆசி ரியை பிரேமலதா பணியிடை நீக்கம் செய்  யப்பட்டார். உடற்கல்வி ஆசிரியை ரம்யா  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டார்.  இந்த பிரச்சனையில் தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவு இயக்குநர் முனைவர் எஸ். ரவி வர்மா மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி  நாளிதழில் வெளியான செய்தியை அடிப்ப டையாகக் கொண்டு அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு வழக்கில் எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்  பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? அம்மாணவி களுக்கு மனநலம் சார்ந்த கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.                 (ந.நி.)

மாதிரி வெடிகளை சோதனையிட்ட தொழிலாளி படுகாயம்

வெம்பக்கோட்டை, பிப்.23- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ளது  தாயில்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான சதீஷ் பட்டாசு ஆலை  உள்ளது. இங்கு வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, தயார் செய்யப்  பட்ட வெடிகளை ஆலையின் ஒதுக்  குப்புறத்தில் பரிசோதனை செய்து  பார்க்கும் பணியை மீனாட்சி புரத்தைச் சேர்ந்த காளிமுத்து (37) செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்த தில், காளிமுத்து மீது தீப்பற்றியது. இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு, சக தொழிலா ளர்கள் விரைந்து வந்து காளிமுத்து வை மீட்டனர்.பின்பு, ஆம்புலன்ஸ் உதவியுடன் சிவகாசி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு முதலுதுவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உடலில் 40 சதவீத அளவிற்கு தீக்  காயம் இருப்பதாக தெரிவித்தனர்.