தென்காசி, ஜூலை 17- பாவூர்சத்திரம் கிங் பீடி கம் பெனி முன்பு பீடித்தொழிலாளர்கள் முறையீடும் போராட்டம் பீடி சங்க மாவட்ட துணைத்தலைவர் பி. தர்மக்கனி தலைமையில் சனிக் கிழமையன்று நடைபெற்றது. பீடி கம்பெனிகள் 1000 பீடிக்கு சுற்றுக் கூலி, பஞ்சபடியுடன் சேர்த்து ரூ. 247.81, 2022 மே மாதம் முதல் அரி யர்ஸ்வுடன் வழங்கிட தொழிலா ளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை கிங் பீடி கம்பெனி உட னடியாக பிஎப் அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். கிங் பீடி கம்பெனி நிர்வாகம் 2 ஆண்டு களாக வழங்காத போனஸ், லீவு சம்பளத்தை உடனடியாக வழங்கிட தமிழக அரசு தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும். வாரந்தோறும் சம்பளம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் ஏ.முத்துலெட்சுமி, திருமலைவடிவு, கோவில் பிள்ளை, குருவம்மாள், ரேவதி, பேச்சியம்மாள் ஆகியோர் முன் னிலை வகித்தனர். போராட்டத்தை துவங்கிவைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன் பேசினார். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கிங்பீடி நிர்வாக மேலாளர் ஹாமீது மற்றும் பாவூர் சத்திரம் கிங் பீடி கம்பெனி சொக்க லிங்கம், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முடிவில் மேற் கண்ட கோரிக்கைகள் சம்பந்த மாக வருகின்ற ஜூலை 22 ல் மேலப் பாளையம் கிங் பீடி தலைமை அலுவலகத்தில் கிங் பீடி கம்பெனி உரிமையாளருடன் பேசி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட் டது. அதன் அடிப்படையில் போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பீடி சங்க மாவட்ட நிர்வாகிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட பீடித்தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.