திருவில்லிபுத்தூர், ஆக.30- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் விருது நகர் மாவட்ட பேரவை கூட்டம் செவ்வாயன்று திருவில்லி புத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்ட இயக்குநர் ஜி.இளங்கோ தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.சீத்தா ராமன் வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் என்.புகழேந்தி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இராமஸ்ரீநிவாசன், மாவட்ட பொருளாளர் சி.பவுண்டுராஜ், அருப்புக்கோட்டை கோட்ட செயலர் சுப்புராஜ், சிவகாசி கோட்ட செயலா ளர் சுந்தர்ராஜ், மாநிலச் செயலாளர் ச.கோமதிநாயகம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சங்கத் தின் தலைவராக திட்ட இயக்குநர் பணி நிறைவு ஜி. இளங்கோ தேர்வு செய்யப்பட்டார்.