பழனி, ஜன.27- திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள் மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு பெரியநாயகி அம் மன் திருக்கோயிலில் திங்களன்று ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மரத் தேர் வெள்ளோட்டத்தினை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு ஆகி யோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, பழனி தைப்பூசத் திருவிழாவினையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பழனியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வரப் பெற்ற புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பா ளரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். இதுதொடர்பாக ஒரு கூட்டத்தினை நடத் திட உள்ளோம். பக்தர்களுக்கு சிரமம் இல் லாத வகையில் சாதாரண நாட்களில் வசூ லித்த கட்டணங்களையே தைப்பூச விழா வின்போதும் வசூலிக்க உத்தரவு பிறப் பிக்கப்படும். மேலும், உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் உறுதி செய்யப்படும். மேலும், தனிநபர்கள் வழங்கும் அன்னதானத்தை வரவேற்பதோடு அவர்களும், பக்தர்களுக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாத வகையில் தரத்தோடு உணவினை தயார் செய்து வழங்கிட வேண்டும். தைப்பூசம் மற்றும் அதனையொட்டி வரு கின்ற இரண்டு நாட்கள் என மொத்தம் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும். கடந்த ஆட்சியில் திருக் கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி யவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அறிவித்தார்கள். அந்த ஆட்சி முடிகின்ற வரை யில் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்ய வில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப் பேற்ற பிறகு தான் 1,289 பணியாளர்கள் பணி வரன்முறை செய்து நிரந்தரம் செய்யப் பட்டுள்ளனர். அதேபோல் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோ சனை குழுவில், கூடுதலாக 500 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வ தற்கு முடிவு எடுக்கப்பட்டு, அவர்களும் விரைவில் பணிவரன்முறை செய்யப்பட உள்ளனர். நாதஸ்வரம் வாசிப்பவர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்கு தகுதிகள் இருந் தால் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனி திருக்கோயிலுக்கு பணியா ளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 3 லட்சம் விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளன. அப்பணியி டங்களுக்கு நேர்காணல் நடத்தி அவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். இப்பணியிடங்களை பெற்று தரு வதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தேனியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி, இழுவை ரயிலில் பயணிப்போ ரின் எண்ணிக்கை 32 லிருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழனி திருக்கோயி லின் பெருந்திட்ட வரைவிற்காக 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வியாபார பெருமக்களுக்காக அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடை கள் அமைக்க முடிவு மேற்கொள்ளப்பட் டுள்ளது என்று தெரிவித்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், பழனி பாத யாத்திரைக்காக போடப்பட்டிருக்கும் சாலை களில் வெளிச்சம் இல்லாததால் பாம்பு போன்ற விஷச் பூச்சிகள் அபாயம் ஏற்பட்டுள் ளதாகவும் பாம்பு கடியினால் நிறைய பேர் மருத்துவமனைக்கு செல்வதாகவும் அந்த நடைமேடையில் விளக்குகள் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், பழனி சார் ஆட்சியர் சீ.கிஷன்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் க.சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர்கள் எம்.கார்த்திக், எஸ்.மாரிமுத்து மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.