சிவகங்கை,ஜன.21- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் கிராமத்தில் நெல்கொள்முதல் மையம் தொடக்க விழா மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலை வர் லதா அண்ணாதுரை தலை மையில் ஊராட்சி தலைவர் சண்முகநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை ,வேளாண்மை உற்பத்தி குழு உறுப்பினர் சோனைமுத்து, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்ப ரேஷன் கொள்முதல் அதிகாரி முருகன், பதினெட்டாம் கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இடைக்காட்டூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை பேசுகை யில், இந்த ஆண்டு ஏற்பட்ட விளைச்சலை தொடர்ந்து தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்ப ரேஷன் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முடிவு எடுத்து மாவட்டம் முழுவதும் 57 மையங்களில் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் மையம் துவங்கியுள்ளனர். விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல் ஒரு கிலோ ரூபாய் 19.6 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலூம் ஒரு கிலோவிற்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி ஒரு கிலோவிற்க்கு ரூ. 20.20 வழங்கப்படுகிறது 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூபாய் 824 வழங்குவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டு வழங்கப் பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது . இடைக்காட்டூர் கிராமத்தில் இன்றைய தினம் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டி ருக்கிறது. விவசாயிகள் மகிழ்வோடு தமிழக முதல்வருக்கும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்ச ருக்கும் நன்றி தெரிவித்துக் கொ ண்டனர் . இந்த மையத்தை விவ சாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.