districts

மதுரை விரைவு செய்திகள்

விவசாயத் தொழிலாளர் சங்க  புதிய கிளைகள் அமைப்பு  

திருச்சுழி, ஜூன்.3- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்கு உட் பட்ட பகுதியில அகில  இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின புதிய கிளைகள் அமைக்கப் பட்டன.         புல்வாய்க்கரையில் கிளைத் தலைவராக பொன் னாத்தா, செயலாளராக அழகுமீனா, பொருளாளராக இருளாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  பிள்ளையார்குளத்தில் கிளைத்தலைவராக மெய்யக்காள், செயலா ளராக விஜயா. பொருளாள ராக மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்னர். கிழக்குத் தெரு பகுதி யில் கிளைத் தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக ஜமுனா, பொருளாளராக பஞ்சு ஆகியோரும், கல்வி மடையில் கிளைத் தலைவ ராக அமுதா, செயலாளராக சாந்தி, பொருளாளராக பஞ்சவர்ணம் ஆகியோரும்    நேர்த்தியாயிருப்பில் கிளைத் தலைவராக கண்மணி, செயலாளராக அமுதா, பொருளாளராக மகாலட்சுமி ஆகியோரும் தேர்வு செய் யப்பட்டனர்.           இந்த கிளை அமைப்புக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை,  மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்  பி. அன்புச் செல்வன், விவ சாய சங்க நிர்வாகிகள் பாலு, பெரியசாமி உள்ளிட் டோ பங்கேற்றனர்.

வீடுகளில் பட்டாசு தயாரித்த 7 பேர் கைது : ரூ.1 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் பறிமுதல்

வெம்பக்கோட்டை, ஜூன்.,3- வெம்பக்கோட்டை அருகே வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம்  மதிப்பிலான  மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிக் கப்பட்டு வருவதாக  தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.   இதையடுத்து, வெம்பக்கோட்டை போலீசார் விஜயகரிசல்குளம், தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் விஜயகரிசகுலத்தை சேர்ந்த செல்வம், செந்தூரப் பாண்டியன், கந்தசாமி, விக்னேஸ்வரன், இளஞ்செழியன் ஆகிய 5 பேர், தாயில்பட்டி கலைஞர் காலனியை பகுதியைச் சேர்ந்த     துரை வைரம், பழனி உள்ளிட்ட 2 பேர் என மொத்தம் 7 பேரை வெம்பக்கோட்டை போலீ சார்,  வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும்,  அவர்களிடமிருந்து பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

பைக், ஆட்டோவிற்கு  தீ வைப்பு 

மதுரை, ஜூன். 3-   மதுரை கூடல்புதூர்  கணபதி நகர் பகுதியில் வியா ழனன்று இரவு வீட்டின் முன் நிறுத்திய  இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.  இதனைப் பார்த்த பொது மக்கள் தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை  கொண்டு விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சி

மதுரை மாநகர் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம மதுரை மாநகர், சமூக வலைதளம் மற்றும்  ஊடகத்துறையி னரை ஒருங்கிணைக்கும் “பயாஸ்கோப்” கிளை துவக்க நிகழ்ச்சி.  மாலை 6 மணி. இடம்: வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி.

நிலுவை வரியை செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை  மதுரை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை 

மதுரை, ஜூன். 2-  மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியை செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.  மதுரை மாநகராட்சியின் புதிதாக பொறுப் பேற்றுக்கொண்ட ஆணையாளர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழனன்று செய்தியா ளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் துறை வாரியாக ஆலோசனை நடத்தியுள்ளேன், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . மதுரை மாநகராட்சி க்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மதுரை நகரத்தின் அழகை மேம்படுத்த தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். மாநகராட்சி வார்டு பகுதிகளில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் சங்க  புதிய கிளை அமைப்பு                       

திருச்சுழி, ஜூன்.,3- திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில்   தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை  அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக மாரியம்மாள், செயலாளராக ரஹமத்துல்லா, பொருளாளராக கே.லாசர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்டத்தலைவர் ஏ. குமரேசன் கலந்து கொண்டு விளக்கிப் பேசினார்.