விருதுநகர் வி.எம்.சி காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சாதாரண, ஏழை, எளிய மக்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் விருதுநகர் ஆட்சியரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக திங்களன்று எட்டுப் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.