districts

நூலகத்தை அகற்ற இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை, ஏப்.13- மதுரை மாவட்டம் பொதும்பு பஞ்சாயத்து பொற்குடில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றக்கோரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொற்குடில் நகரைச் சேர்ந்த சவரி ஆரோக்கியம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில், பொற்குடில் நகர் 2018-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பொதும்பு பஞ்சாயத்தில் உரு வாக்கப்பட்டது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு பஞ்சாயத்து விதி களின்படி மூன்று இடங்கள் பூங்கா என வகைப் படுத்தப்பட்டுள்ளது. பூங்கா அமைந்துள்ள இடத்தில் பொற்குடில் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நூலகம் அமைக்கப்பட்டது. தற்போது பொதும்பு பஞ்சாயத்து தலைவர் நூல கத்தை அகற்ற வேண்டும் என 2022 மார்ச் 15-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதும்பு பஞ்சா யத்து பொற்குடில் நூலகத்தை அகற்றக்கூடாது என  அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை. எனவே, நூலகத்தை அகற்றக்கோரி பஞ்சா யத்து தலைவர் 2022 மார்ச் 15 ஆம் தேதி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கவும், நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சார்வகன் பிரபு, ஜெயசங்கர், ஜெயக்குமார் ஆகியோர் ஆஜ ராகி வாதாடினர். அப்போது நீதிபதிகள், நூலகத்தை அகற்றக் கோரி பொதும்பு பஞ்சாயத்துத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தர விட்டார்.