districts

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக்கொன்ற கொடூரம்

மதுரை, டிச. 7 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத் தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தி 15  பேரை படுகொலை செய்த வழக்கில், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை, மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த  கோரிக்கையின் அடிப்படையில், இவ்வழக் கில் சிபிஐ முறையாக மறுவிசாரணை நடத்தி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது ஆறு மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதி யான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, கடந்த 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ-க்கு புகார் மனு

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்கு  காரணமான மாவட்ட ஆட்சித் தலை வர் வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்திபன், வட்டாட்சியர்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர் மீது  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் 29.05.2018 அன்று சிபிஐ-க்கு புகார் மனு அனுப்பி னார்.

உயர் நீதிமன்றத்திலும்  பொது நல வழக்கு

பின்னர், துப்பாக்கிச் சூட்டிற்கு காரண மான போலீசார் மற்றும் வருவாய்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பொதுநல மனுக்களும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. 

அதைத்தொடர்ந்து, வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதுடன் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கே.எஸ். அர்ச்சு னனின் புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டு மென்று சிபிஐ-க்கு உயர்நீதி மன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

போலீஸ் எப்ஐஆர் மீதே சிபிஐ-யும் விசாரணை
ஆனால், சிபிஐ அமைப்பானது, ஏற்கெனவே போலீசாரால் பதிவு செய்யப் பட்டிருந்த அதே முதல் தகவல் அறிக்கை யின் மீதே விசாரணையை துவக்கியதோடு கே.எஸ். அர்ச்சுணனின் புகார் மனு மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவில்லை. 

இதனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. பின்னர் ஒருவழியாக, விசாரணை யை முடித்த சிபிஐ, காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. 

இறுதி அறிக்கை மீது சிபிஎம் ஆட்சேபணை

ஆனால், சிபிஐ-யின் இந்த இறுதி அறிக்கை, சிபிஐ-யின் நடவடிக்கை சட்ட  விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐ-யின் இறுதி அறிக்கையை நிரா கரித்திட வேண்டுமென்றும், படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு ஆட்சேபணைகள் அர்ச்சுண னால் எழுப்பப்பட்டு- அந்த ஆட்சேபணை மனு, சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதன் மீது சிபிஐ-யின் பதில் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்நிலையில், 6.12.2023 அன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த- மதுரை  சிபிஐ தலைமை குற்றவியல் நீதித்துறை  நடுவர் நீதிமன்ற நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரித்தார். மேலும், சிபிஐ முறையாக மறுவிசாரணை நடத்தி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது 6 மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அயராத சட்டப் போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை யினர் மீது நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, துவக்கம் முதலே அனைத்து சட்ட நடவடிக்கைகளிலும் ஈடு பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலைகள் மற்றும் அராஜகங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் ஒரே குற்ற வழக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலா ளர் கே. எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இவ்வழக்கில் கே.எஸ். அர்ச்சுணன் தரப்பில் வழக்கறிஞர்கள் எல். ஷாஜிசெல்லன், இ. சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.