மதுரை, ஜூலை 28- ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியதை திரும்ப பெற வேண் டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்து வேண்டும் என்று வலியுறுத்தி எல்பிஎப், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டி யூசி, எச்எம்எஸ், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், எஸ்டிடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் பிரச்சார பேரணி நடைபெற்றது. ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் கே. ராஜசேகர் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செய லாளர் சி.கருணாநிதி, பேரவை செய லாளர் மேலூர் வி. அல்போன்ஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், தலைவர் இரா. தெய்வ ராஜ், எச்எம்எஸ் தலைவர் வி. பாதர் வெள்ளை, ஏஐடியூசி மாவட்டச் செய லாளர் கே.சேது, தலைவர் என். நந்தா சிங், எம்எல்எப் மாநில நிர்வாகி எஸ். மகபூப்ஜான், ஏஏஎல்எல்எப் நிர்வாகி பெ.சரவணன், எஸ்டிடியூ நிர்வாகி கே.சாகுல் அமீது உள்பட ஏராள மான கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் பிரச்சாரம் திண்டுக்கல்லில் தொழிற்சங்கங் கள் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் தெரு முனை பிரச்சாரம் நடைபெற் றது. எல்.பி.எப் சார்பாக அழகர்சாமி, எச்.எம்.எஸ் சார்பாக சையது, ஏ.ஐ. டி.யு.சி சார்பாக ராஜாங்கம், சி.ஐ.டி.யு சார்பாக கே.பிரபாகரன், ஐ.என்.டி.யு.சி சார்பாக உமா, ஏ.ஐ.சி.சி.டி.யு சார்பாக ரவி, எம்.எல்.எப் சார்பாக மோகன், உள்ளிட்ட தொழிற்சங்கத் தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.