திண்டுக்கல், ஜூன் 5- திண்டுக்கல்லில் கோஆபரேட்டிவ் காலனி அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கே.டி. சிட்டி சென்டர் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உண வுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர். இதையடுத்து விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் இந்திய தங்க மங்கை முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, எண்டாஸ்கோப்பி நிபுணர் ராஜாமணி, சுதா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் தனபாக்கியம், எலும்பு முறிவு டாக்டர் டேவிட் ராஜன்,கிளமென்ட் ஜோசப் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மருத்துவமனையில் முதுகு தண்டுவடம், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணி பெண்க ளுக்கு, எலும்பு முறிவுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் பிசியோதெரபி இலவசமாக செய்யப்படுகிறது. உடல் பரிசோதனைகளுக்கு சலுகை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா விற்கு வருகை தந்த அனைவரையும் கே.டி மருத்துவ மனை சேர்மன் துரைமுருகன் மற்றும் சொர்ணபிரியா ஆகியோர் வரவேற்றனர்.