districts

சுகாதார காப்பீட்டு நிறுவன அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர்,டிச.24 - உடல்நலக் காப்பீடு நிறுவனமான நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் தஞ்சாவூர் நகரில் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.   அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏறக்குறைய 3000 நபர்களுக்கு உடல்நல காப்பீட்டு வசதியை வழங்க இது திட்டமிட்டிருக்கிறது.  இந்நிறுவனம் நாடெங்கிலும் 100 அலுவலகங்களை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.  இந்த, நிதியாண்டு 24-க்குள் 600 நகரங்களை தனது சேவை செயற்பரப்புக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.   தமிழ்நாடெங்கிலும் காப்பீடு முகவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சர்வே, கோவிட்-19 பரவலுக்குப் பிறகு உடல்நலக் காப்பீட்டிற்கான தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.