மதுரை, மே 7- மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை கப்பலூர் கிளை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை நடத்தின. கப்பலூரில் நடைபெற்ற முகாமை வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.தமி ழரசன் மற்றும் திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் பி.ராம்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாவட் டத் தலைவர் வி.கருப்பசாமி வாழ்த்திப் பேசினார். இந் நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கப்ப லூர் கிளை தலைவர் என். ராஜா, செயலாளர் ஆர்.சூரியபிரசாத், நிர்வாகிகள் அழகு செல்வம், ஆர்.சுரேஷ், டி.கார்த்திக் மற்றும் சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்த முகாமில் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.