மதுரை, ஜன.7- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையில் இருந்து 280 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 610 பேருந்துகளும் ( திருச்சி - 135. திருப்பூர -80 . கோவை -120 . திருநெல்வேலி -35 . நாகர்கோவில் -35 , திருச்செந்துரர் -30 , மற்றவை -175) மற்றும் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 16.01.2023 முதல் 18.01.2023 வரை சென்னைக்கு 275 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 625 பேருந்துகளும் ( திருச்சி - 138. திருப்பூர -77 , கோவை -121 , திருநெல்வேலி -35 , நாகர்கோவில் -35. திருச்செந்தூர் -30 , மற்றவை -189 ) பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும் , முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள்/ கண்காணிப்பாளர்கள் / பணியாளர்கள் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.