districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பால் பாளையம் ரயில்நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல், ஜன.4 பாலக்காடு முதல் சென்னை  வரையிலான ரயிலை  பாளையம் ரயில்நிலையத் தில் நிறுத்த வேண்டும் என்  பன  உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிபிஎம்  அறிவித்த ரயில் மறியல்  போராட்டம் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து வாபஸ் பெறப்பட் டது.  திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத் திற்குட்பட்ட ரயில்வே சுரங்  கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற 7.5 எச்.பி. தானியங்கி மின் மோட்டார் பொருத்த வேண்டும்.  பாலக்காடு, சென்னை வரை யிலான ரயில்கள் அனைத்  தும் பாளையம் ரயில்நிலை யத்தில் நின்று செல்ல வேண்  டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வியாழனன்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பாக ரயில் மறியல் போராட் டம் நடத்த அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் புத னன்று ரயில்வே அதிகாரி களுடன் பேச்சுவாரத்தை நடைபெற்றது.  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் , பாலக்காடு முதல் சென்னை வரையி லான அனைத்து ரயில்களும் பாளையம் ரயில்நிலை யத்தில் நின்றுசெல்ல நட வடிக்கை எடுப்பது என்றும், வெள்ளப்பாறை முதல் பூசாரிபட்டி வரை சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் ரயில் பாதையில் வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றதால் முருகேசன் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முரு கேசன் மீதான வழக்கு தொடர்பாக உயர் அலுவலர்  களின் கவனத்திற்கு எடுத்துக் கூறி நீதிமன்றம் சென்று  ரத்து  செய்யப்படும் என்று  தலைமை செயற்பொறியா ளர் உறுதியளித்தார். குஜி லியம்பாறை வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஏ.ராஜரத்தினம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்  தலைவர் ஆர்.ஆறுமுகம், எல்.தங்கவேல், பெ.பால சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (ந.நி)