districts

img

கடமலை-மயிலையில் வளர்ச்சிப் பணிகளை அதிகாரி ஆய்வு

கடமலைக்குண்டு, மார்ச் 2- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை புதனன்று ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் அனிதா ஆய்வு செய்தார்.  அப்போது பெரும்பாலான பணிகளுக்கு அரசு ஒப்புதல் இல்லாத சிமெண்டு மூட்டை கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இத னையடுத்து வரும் நாட்களில் இருந்து அனைத்து பணிகளுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ள சிமெண்டு மூட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை ஒன்றிய பொறியாளர்கள் முறையாக கண்கா ணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  இதேபோல கடமலைக்குண்டு பகுதி யில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மஞ்சள் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணி களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்றிய பொறியாளர் மற்றும் பணி மேற் பார்வையாளர்கள் இல்லாமல் கட்டி முடிக் கப்பட்டிருந்த சுமார் 17 மீட்டர் நீளமுடைய தடுப்பணையில் அடித்தள பகுதியை இடித்து விட்டு மீண்டும் கட்டுமாறு உத்தரவிட்டார்.  இதேபோல தரம் குறித்து கண்டறிவ தற்காக தடுப்பணையில் சிமெண்டு பகுதி களை சோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின் போது, கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, கண்ணன், கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், பொறியா ளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.