சிவகங்கை,ஜன.9- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் திட கோட்டை புளியால் கிரா மத்தில் பட்டியல் சமூக மக் கள் 150 வருடங்களாகப் பயன்படுத்தி வந்த சுமார் 35 ஏக்கர் நிலங்களைத் தனி நபர் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் தேவ கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், வட்ட தலைவர் கஸ்பார் ஆகி யோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநி லத் துணைத்தலைவர் முத்து ராமு, மாவட்டத் தலைவர் வீர பாண்டி, செயலாளர் மோகன், பொருளாளர் விசு வநாதன், விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி அஜீஸ்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். புளியால் கிராமத்தில் 35 ஏக்கர் நிலங்களை 150 வரு டங்களுக்கு மேலாகப் பட்டி யல் இன மக்கள் பட்டா போட்டு அனுபவித்து வரு கிறார்கள். இந்த நிலங்க ளுக்கு இராமநாதபுரம் ஜமீன் ரசீது போட்டு பட்டாவும் வழங்கி உள்ளார் .இந்த நிலங்களுக்கு மோசடியாகப் பட்டா பெற்றுப் பாழடைந்த தூர்ந்து போன ஆழ்துளை கிணற்றுக்கு இணைப்பு பெற முயற்சி நடைபெறு கிறது. போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்துச் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் பேசியவர்கள் வலி யுறுத்தினர்.